பரபரப்பு தமிழகம் …
தமிழ்நாடு சசிகலாவினை எதிர்க்கும் அளவிற்கு இன்னொரு அரசியல்வாதியினை எதிர்த்ததுமிலை, எதிர்க்க போவதுமில்லை
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி சசிகலா முதல்வர் ஆவாரென்றால் அது அவருக்கே பெரும் அவமானம்
தமிழகத்திற்கு அதனை விட பெரும் அவமானம்
எம் எல் ஏக்களை எல்லாம் சிறை வைத்துவிட்டார்களாம், அதுவும் குடும்பத்தோடு கடத்திவிட்டார்கள் என சலசலப்பு வேறு
சினிமாக்கார கட்சி அது, ஆனாலும் தெலுங்கு சினிமா அளவிற்கு செல்வதுதான் அழிச்சாட்டியம்.
சினிமா காட்சிகள் ஒருகாலமும் நிகழ்காலம் ஆகிவிடமுடியாது..
கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டமிடுவான், அதனை தாண்டினால் சர்வ அழிவு, சிலருக்கு சிறிய வட்டம். டிர்ம்ப் போன்றோருக்கு பெரிய வட்டம்
சசிகலாவிற்கும் ஒரு வட்டம் ஆண்டவன் போட்டிருக்கின்றான்
அதனை அகலபடுத்தி பெருவட்டமாக ஆக்க அவர் முயற்சித்தாரென்றால் அது மிக பெரும் அழிவிலேதான் முடியும்
சசிகலா இனி முதல்வர் பதவிக்கு ஆசைபடாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.
மீறினால் அவருக்கான அழிவினை வரவேற்றுகொண்டிருக்கின்றார் என பொருள்
அப்படியே முதல்வரானாலும் கட்சிக்கு இன்னும் 4 ஆண்டுகள் உண்டு, நிம்மதியாக ஆண்டுவிட முடியுமா?
6 மாதத்தில் கவிழ்த்துவிட மாட்டார்களா? அதன் பின் ஆயுசுக்கும் எழ முடியுமா?
அதிமுக எம் எல் ஏக்களை மீட்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு
கனம் கோட்டார் அவர்களே, கடத்தபட்ட எம் எல் ஏக்களையே அந்த கும்பலிடம் இருந்து மீட்டுதாருங்கள் என உங்களிடம் வந்திருக்கின்றார்கள்
இனி இந்த கும்பலிடம் தமிழ்நாடு சிக்கினால் மீட்க போவது யார்? என சிந்தித்து முடிவு சொல்லுங்கள் எசமான்.
மிஸ்டர் அதிமுக அடிமைஸ், நீங்கள் முதலில் செய்யவேண்டியது , ஒருவர் வேறு கட்சியில் இருந்துகொண்டு சதா சசிகலாவினை பற்றி கவலைபட்டுகொண்டிருக்கும் ஒருவரை கட்சிக்குள் இழுத்து வருவது
ஏன் இன்னொரு கட்சிக்குள் இருந்து கொண்டு அவர் இப்படி பாடுபடவேண்டும்?
அந்த திருநாவுக்கரசை அழைத்துகொண்டு வந்து சி.ஆர் சரஸ்வதிக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் இடையில் அமர வையுங்கள் புண்ணியமாய் போகும்
தமிழக காங்கிரசாரே, இந்த மனிதரை இன்னும் சத்தியமூர்த்தி பவனில் விட்டுவைத்தீர்கள் என்றால் , இந்திரா பக்கத்தில் சசிகலா படத்தினை சத்தியமூர்த்திபவனில் வைத்தே விடுவார்
அந்த அளவிற்கு இவருக்கு புத்தி பேதலித்துவிட்டது
தமிழக காங்கிரசினை முதலில் இந்த திருநாவுக்கரசரிடமிருந்து காப்பாற்றுங்கள்….
ஆக தமிழக அரசியல் கால்பந்தில், பந்து கோல்கீப்பர் எனும் ஆளுநர் வசம் நோக்கி செல்கின்றது,
அவர் பந்தினை திருப்பும் விதம் பொறுத்து பன்னீரோ, சசிகலாவோ தலையால் கோல் அடிப்பார்கள்.
அந்த கோல்கீப்பர் தானாகவே ஆடிவிட்டால் , ஆட்டம் மறுபடியும் தொடங்காதா என முக ஸ்டாலின் பார்த்துகொண்டிருக்கின்றார்
அந்த கோல்கீப்பர் என்ன செய்ய போகின்றாரோ?
தமிழக மைதானம் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது.
என்ன செய்வது, தமிழக அரசியல் விளையாட்டும், கேளிக்கையுமாகி நெடுநாள் ஆகிவிட்டது
வாக்களித்து அவர்களை தெர்தெடுத்துவிட்டு இன்று அவர்கள் காணாமல் போனார்களா, கடலுக்கு போனார்களா என கொஞ்சமும் கவலையின்றி இருக்கும் 131 தொகுதி மக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது
ஏன் மக்களே, அவர்கள் என்ன ஆனார்கள் என தேடிபார்த்து மீட்டுவரும் கவலை கொஞ்சமும் உங்களுக்கு இல்லையா?
நட்சத்திர ஹோட்டலில் சிறையில் இருக்க தேர்ந்தெடுத்தீர்களா? இல்லை சட்டமன்றத்தில் உங்களுக்காக பேச தேர்ந்தெடுத்தீர்களா?
உங்கள் பிரதிநிதிகள் என்ன ஆனார்கள்? எங்கு இருக்கின்றார்கள் என அறிந்துகொள்ளும் உரிமை உங்களுக்கு இல்லையா?
எங்கோ சிக்கிகொண்டார்களாம், முடிந்தால் மீட்டு வாருங்கள்.
இல்லை எங்கள் தொகுதி எம் எல் ஏ செத்துவிட்டார், இனி அவர் எங்கள் தொகுதி சமஉ இல்லை என உலகிற்கு அறிவித்துவிடுங்கள்.
மக்கள் முதல்வர்கள் இருக்கும் தமிழகத்தில் மக்கள் சமஉ இருக்க கூடாதா என்ன?
அய்யா சீமான், தமிழகத்தில் 131 “தமிழின துரோகிகள்” இருக்கின்றார்கள் என ஒரு அறிக்கை விட்டால்தான் என்ன?
காங்கிரசும், கலைஞரும் “தமிழின துரோகி” என அடிக்கடி சொல்வீர்களே, இந்த 131 பேரை எந்த வகையாறாவில் வைப்பீர்கள்?
எங்கோ தமிழ் தொகுதி எம் எல் ஏக்களை சிறைவைத்திருக்கின்றார்களாம், கொஞ்சம் உங்கள் அதிரடி தமிழ்படையோடு சென்று மீட்டால்தான் என்ன?
இதுதான் நீங்கள் தமிழநாட்டை மீட்க போகும் லட்சணமா?
செல்லுங்கள், அந்த 131 தமிழ்பிள்ளைகளையும் மீட்டு கொண்டுவாருங்கள்
முடியாவிட்டால் அவர்களுக்கு உங்கள் அண்ணன் பாணியில் சயனைடாவது கொடுத்து தொலையுங்கள்