பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி

No automatic alt text available.நாட்டரசன் கோட்டை அருகே பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி

வள்ளுவனுக்கும், இளங்கோவிற்கு பின் தமிழுக்கு அழியா காப்பியம் கொடுத்தவன் கம்பன், தமிழ்தாய்க்கு அவன் சூட்டிய மகுடம் அது.

ஆனால் அந்தோ பரிதாபம் அவன் சமாதி தேடுவாரற்று கிடக்கின்றது.

தமிழ், தமிழர் என் 60 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் ஆட்சியில் அந்த ஆதிதமிழனுக்கொரு அங்கீகாரமில்லை

ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் மணிமண்டபம் கட்டும் தமிழகத்தில் தமிழ்தாயின் தலைமகனுக்கோர் இடமில்லை

அவன் அப்படி என்ன செய்துவிட்டான்?

ஆம், ராமனின் கதையினை அழகு தமிழில் சொன்னதுதான் தவறாம். அந்த ஒரு காரணத்திற்காகவே அவன் இக்கட்சிகளால் புறக்கணிக்கபட்டான்

கம்பனை சொன்னால் ராமாயணத்தை புரட்டவேண்டியிருக்கும் என்றொரு வஞ்சக திட்டத்திலே அவன் மறைக்கபட்டான்.

இப்பொழுதெல்லாம் ஆன்மீகம் விழித்தெழுகின்றது, போலி பகுத்தறிவுகள் சரிகின்றன. தமிழுணர்வும் கொஞ்சம் தளைக்கின்றது

இனியாவது அந்த தலைமகனுக்கு செய்யவேண்டிய மரியாதையினை இம்மாநிலம் செய்யட்டும்

அரசுகள் செய்யாவிடின் தமிழ்வுணர்வு மிக்கோர், கம்பனை ரசித்தோர் இணைந்து செய்யலாம்

தமிழனாக இருந்தால், தமிழை நேசித்தால் அதனை செய்வோம்

எல்லோரும் இணைந்து அவனுக்கோர் மண்டபம் கட்டிவிடும் காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது.

தமிழறிஞர்களை , தமிழடியார்களை இணைத்து அக்காரியத்தை செய்ய நல்ல வழிகாட்டியினை தமிழறிந்தோர், கம்பனை புரிந்தோர் தேடிகொண்டிருக்கின்றோம்