பரிதாப வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார் ஜெயலலிதா….

ஜெயலலிதா சொத்துகுவிப்பில் கூட இல்லாத மர்மம் எல்லாம் அவரின் மரணத்தில் கிளம்புகின்றது

மரணம் நேரம் அறிவிக்கபட்ட குழப்பம் என்ன? 75 நாள் ஒரு படம் கூட வராத மர்மம் என்ன? என்பதெல்லாம் கடந்து, அவரின் கைரேகையில் மர்மம், என்பார்மிங் மர்மம் என பல வந்துகொண்டிருக்கின்றன‌

இதெல்லாம் ஒரு படி மேலே சென்று ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? என ஒரு கும்பல் கிளம்பியிருக்கின்றது

தினமும் வணங்கிய கால்கள் அல்லவா? அவர்களில் யாரேனும் ஆற்றாமையில் “எங்கே அம்மா அந்த கால்கள்” என ஆற்றாமையில் அழுதிருப்பார் என்றால் அது அவர்கள் அல்ல,

அவர்கள் சின்னம்மா உங்கள் கால்கள் எங்கே என சென்றாயிற்று

இப்படி கிளம்புவது இந்த சந்தேக கும்பல்.

முன்பு அவரின் சொத்துகுவிப்பில் சந்தேகம் வந்தது, உடனே வழக்கு தொடுத்தார்கள் , 20 வருடம் நடத்தினார்கள், யார் நடத்தினார்கள்? எப்படி நடத்தினார்கள்? யார் செலவு செய்தார்கள் என்பதெல்லாம் தெரியாது,

ஆனால் வழக்கு நடத்தினார்கள்.

இன்னும் பல சந்தேகங்களை தீர்க்க பலர் கேள்வி எழுப்பிகொண்டே இருந்தார்கள், எல்லாம் அவர் இருக்கும் வரை, அரசியல் செய்யும் வரை.

இப்பொழுது அவரின் மரணத்தில் என்ன மர்மம் என தெரிந்துகொள்ள அவர்களுக்கும் விருப்பம் இல்லை, கட்சிக்காரர்களுக்கும் இல்லை ,

ஒருவருக்கும் இல்லை

அட நம்ம சுப்பிரமணியன் சாமிக்கு கூட இல்லை

என்னாச்சி? என கேட்பதற்கு கூட ஆளில்லா பரிதாப வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார் ஜெயலலிதா.