பருவமழை போற்றுதும் , பருவமழை போற்றுதும்

திராவிட பெரியார் , அம்பேத்கர் இன்னபிற புரட்சியாளார்கள் வழியில் பலர் போராடமலே வான்மழை பொத்துகொண்டு பெய்வது மகா ஆச்சரியம்

மிக கடுமையான மழை பெய்திருக்கின்றது தென்னகம் முழுக்க நல்ல நீர்வரத்து இருக்கின்றது, நிச்சயம் இது மகிழ்சியான விஷயம்

கோவை நீலகிரி பகுதியும் அதை அடுத்த வயநாடு பகுதியும் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றன , சேத விவரங்கள் இன்னும் வரவில்லை

கேரளமும் கடும் பாதிப்பில் இருக்கின்றது, அவர்கள் மீண்டு வர வேண்டுவோம்

வயநாடு ராகுலின் தொகுதி என்பதால் இம்முறை தென்னக சோகம் மிக எளிதாக டெல்லியினை எட்டுகின்றது என்பது ஆறுதலான செய்தி, ராகுல் தொடர்ந்து தென்னகத்திலே இருக்கட்டும்

உலகே வெள்ளத்தில் அழியும் பொழுதுதான்ராதாபுரம் பக்கம் நியாயமான மழை பொழியும் என்பது பொது விதி

அப்படி அந்த வறண்ட பக்கமும் நல்ல மழை பெய்திருகின்றது , ஒரு வறண்ட நிலத்தின் விவசாயி எனும் வகையில் அது பெரும் ஆறுதல்

பருவமழை போற்றுதும் , பருவமழை போற்றுதும்