பரோலில் சசிகலா….

Image may contain: 1 person, sitting

பரோலில் வந்த சசிகலாவினை மூன்றே நாளில் உள்ளே தள்ளும் விஷயத்தில் இறங்கி இருகின்றது தினகரன் தரப்பு

அதாவது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சசிகலாவிற்கு பரோல் கொடுத்தது சிறை, அதுவும் அரசியல் பேச கூடாது, யாரையும் சந்திக்க கூடாது, பேட்டி கொடுக்க கூடாது என ஏகபட்ட நிபந்தனை. இதில் ஒன்றை மீறினாலும் பரோல் ரத்தாகும்

இப்பொழுது 25ம் தேதி காவேரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது தினகரன் கோஷ்டி

ஆனால் நடராஜன் இறந்ததால் அது மாற்றபடும் என செய்திகள் வந்தன, இங்குதான் சசிகலாவிற்கு சனி பிடிக்கின்றது

“நடராஜனுக்காக பார்க்க வேண்டாம், குறித்த நாளில் போராடுங்கள் என உத்தரவிட்டார் சின்னம்மா” என தினகரன் தரப்பு குதிக்கின்றது

கணவனை இழந்த நிலையிலும் காவேரிகரை விவசாயிகளை நினைக்கின்றார் தியாகதலைவி எனும் அனுதாப அரசியல் அவர்கள் கணக்கு

ஆனால் “கணவருக்கு அஞ்சலி செலுத்த சென்று தினகரனுக்கு உத்தரவிட்டீர்களா? ம்ம்ம் போங்கள் உள்ளே, பரோல் ரத்தாயிற்று” என சட்டம் சீற வாய்ப்பு உண்டு என்பதை மறக்கின்றார்கள்

கொஞ்சம் முயற்சித்தால் இதனை சாக்காக வைத்து சசிகலாவின் பரோலை ரத்து செய்ய முடியும்

ஸ்டாலின் இதனை எல்லாம் செய்யமாட்டார், அவர் ஏதோ இந்திரன் வந்து தனக்கு முடிசூடுவான் எனும் கனவில் இருப்பவர்

ஆனால் பழனிச்சாமி கோஷ்டி செய்யலாம், எனினும் சசிகலா மீது அனுதாபம் வரலாம் என்பதால் செய்யதயங்கலாம்

டிராபிக் ராமசாமி என்பவர் இப்பொழுது சத்தமில்லை

ஆனால் சசிகலா பரோலை ரத்து செய்ய அட்டகாசமான வாய்ப்புகளை தினகரன் தரப்பே எடுத்து கொடுப்பதுதான் சோகம்..

ஜெயலலிதா வளர்த்துவிட்டவர்களுக்குத்தான் கொஞ்சமும் அறிவில்லை என்றால், சசிகலா வளர்த்ததும் அப்படித்தான் இருக்கின்றது.