பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம்
விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம்
இந்த தலித் காவலர்களான திருமா போன்றோர், அம்பேத்கரின் மறுபிறப்ப்பு என சிலரை நம்ப வைக்கும் ரஞ்சித் போன்றவர்களை எல்லாம் இப்பொழுது காணவே முடியாது
இரண்டுமே ஒடுக்கபட்டதாக சொல்லும் சாதி, இதில் எது மிக தாழ்த்தபட்டது என்பதில் வெட்டி கொண்டிருக்கின்றார்கள்
இந்த திராவிட சிங்கங்கள், பெரியாரிஸ்டுகள், வீரமணி கும்பல் எல்லாம் இதை கண்டுகொள்ளாது
இதுவே பிராமணனுக்கும் இன்னொரு சாதிக்குமான காதல் கதை என்றால் பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? என சீறுவார்கள்
பிராமணரை தவிர மற்ற சாதி சண்டையிட்டால் பெரியார் ஒன்றுமே சொல்லவில்லை என ஆமை ஓட்டுக்குள் தலையினை இழுப்பது போல் இழுத்து கொள்வார்கள்
இங்கு நடந்திருப்பது இரண்டு சாதிகளுக்கான மோதல் ஆனால் சில பகுத்தறிவாளரிடம் கேட்டால் இதற்கும் பிராமணனே காரணம் அவன் வகுத்ததால் வந்த சாதி சண்டை இது என்பார்கள்
சரி நீங்கள் இங்கு சென்று பகுத்தறிவில் யோசியுங்கள், பிராமணன் சொன்னதால் நீ பறையன் நீ அருந்ததியர் சாதி என நம்புகின்றாய்,. அப்படி எல்லாம் இல்லை இருவருமே மனிதர்கள், காதலை ஏற்று வாழ்த்துங்கள் என சொல்வார்களா என்றால் சுத்தமாக இல்லை
இந்த திருமா, ரஞ்சித் கோஷ்டியாவது காதலர்களை புத்தமதத்திற்கு மாற்றி வாழ வைப்பார்களா என்றால் இல்லை.
எது பிரச்சினையோ அதுபற்றி பேசமாட்டார்கள், எதை வைத்து அரச்சியல் செய்யமுடியுமோ அங்கு பகுத்தறிவாளன் முதல் எல்லா சாதி காவலரும் குழுமி ஆரியம் ஒழிக, பிராமணன் ஒழிக இந்துத்வா ஒழிக என கிளம்பிவிடுவார்கள்