பலன்பெற்ற பயிர்கள் எல்லாம் வாடுகின்றன..
காபி டே எனப்படும் செயின் ஷாப் கடைகளை நிறுவிய சித்தார்த் என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்றன செய்திகள்
வழக்கம் போல மோடி ஆட்சியில் தொழில் நசிந்துவிட்டது, கடன் வாங்கி செத்தோர் அதிகமாகிவிட்டனர் என்ற குரல் கேட்க ஆரம்பித்தாயிற்று
இந்தியாவில் திடீர் பணபுழக்கம் வந்தது 1990களுக்கு பின்பு, அது அசுரவேகம் எடுத்தது மன்மோகன் சிங் ஆட்சியில்
இது தொழில் முதலீட்டில் குவிந்த பணமா? இல்லை அரசு மறைமுகமாக அனுமதித்து வெளிநாட்டினர் கொட்டிய முறையற்ற பணமா எனும் சர்ச்சை அன்றே இருந்தது
காரணம் 2016க்கு முற்பட்ட 20 ஆண்டு காலங்களில் வங்கிகளில் பலநூறு கடன்களும் இன்னபிற சலுகைகளும் எளிதாக கிடைத்தன
எங்கிருந்து வருகின்றது? யார் கொடுக்கின்றார்கள்? இந்த பணத்தின் மூலம் என்ன என்பதெல்லாம் யாரும் கவனிக்கவில்லை
இதனால் விலைவாசி எகிறியது, பணமதிப்பு மறைமுகமாக வீழ்ந்தது
அதாவது ஊதி பெருத்த ஊளை சதை போல ஆகிவிட்டது தேசத்தின் நிலை , வளர்ச்சி அல்ல ஒருவகை வீக்கம்
2016க்கு பின் சில நடவடிக்கைகள் எடுக்கபட்டன அதில் ஊதிபெருக்கபட்ட பலூன் வெடித்தது, ஊளை சதை குறைக்கபட்டது
விளைவு நாடு நலிவுற்றது போலவும், தொழில் நசிந்துவிட்டது போலவும் தெரிகின்றது
கவனித்து பாருங்கள்
இந்த நசிவு 1990க்குமுன்பே தொழிலை நிலை நிறுத்தியவர்களை பாதிக்கவில்லை
டாட்டா, டிவிஎஸ் இன்னபிற சாம்ராஜ்யங்களை அசைக்கவில்லை
அசைந்து விழுவதெல்லாம் 1990க்கு பின் எளிதில் கடன்பெற்று திடீர் சாம்ராஜ்யம் அமைத்த கோஷ்டியே
அவை புஸ்வானம் போல எழுந்த வேகத்தில் சரிகின்றது, அவை எல்லாம் யாரோ கொடுத்த கடனிலும் பணத்திலும் எழுந்தவை அரசின் நடவடிக்கைக்கு பின் விழுந்தன
நிலமில்லா விவசாயியும், முதல் இல்லா வியாபாரியும் பலத்த நஷ்டத்தை சந்திப்பான் என்பது முதுமொழி
இங்கு 1990க்கு பின் முளைத்த புற்றீசல் தொழிலதிபர்கள் எல்லாம் பாதிக்கபடுகின்றனர் என்பதுதான் நிஜமே அன்றி விஷயம் வேறல்ல
ஆக மன்மோகனின் காலங்களில் எதுவோ திறந்துவிடபட்டிருகின்றது, இப்பொழுது அது அடைபட்டிருக்கின்றது
அதில் பலன்பெற்ற பயிர்கள் எல்லாம் வாடுகின்றன..