பல்லவர் தமிழரில்லை
பல்லவர் தமிழரில்லை என சொன்னாயா என கேள்விமேல் கேள்விகள்.
எவனெல்லாம் தமிழகத்தை ஆண்டானோ அவனை எல்லாம் தமிழ்மன்னராக கொண்டாடுவது தமிழர் வழக்கம் பல்லவரையும் அப்படி சேர்த்துவிட்டார்கள்
ஒரே ஒரு எடுத்துகாட்டு பாருங்கள் விளங்கும். சோழரின் கல்வெட்டெல்லாம் தமிழில் இருக்க பல்லவர் கால கல்வெட்டெல்லாம் பிராமி மொழியிலே இருக்கும். பிராமி மொழி சமஸ்கிருதத்திற்கு முந்தையது
பல்லவர்களின் காலம் எப்பொழுது தொடங்குகின்றது புலிகேசி எனும் மன்னனின் காலமுடிவில் தொடங்குகின்றது
வரலாறு முழுக்க அந்த புலிகேசியினை கொடூரமானவன் என்றும், காமெடி முரடனாகவுமே சித்தரித்துவிட்டார்கள். திரைப்படம் கூட வந்தது. கல்கி கூட அப்படித்தான் எழுதினார்
உண்மையில் புலிகேசி யார்?
சாதவாகன பேரரசு என்பது இந்துமதத்தை அடக்கிய பவுத்த அரசு, குறிப்பாக பிராமணர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது
மஹாரஷ்டிரா முதல் ஆந்திராவரை ஆண்டார்கள், அஜந்தா எல்லோரா குகைகள், ஆந்திர குண்டூர் பக்கம் காணபடும் புத்த அடையாளங்களுக்கு எல்லாம் அந்த ஆட்சியே காரணம்
புலிக்கேசி மன்னன் அப்படி பிராமணரை ஒடுக்கி வைத்திருந்தான், இந்துக்கள் தலை எடுக்கவே முடியவில்லை விளைவு என்னாயிற்று
முன்பு பாரசீகமாக இருந்த ஈரானில் சசானியர்கள் பேரரசை எழுப்பினார்கள், ஈரான் என்றார்கள். ஈரான் என்றால் என்ன பொருள் தெரியுமா? “ஆரிய நாடு”
அந்த சசானிய அரசும் அவர்களுக்கு பின்னரான பார்த்திய அரசும் பேசியது பல்லவமொழி. சசானிய பேரரசு என்பது அலெக்ஸாண்டருக்கு பின்னரான கிரேக்க ஆட்சியினை எதிர்த்து எழும்பியது
ஆரியர்களின் நாட்டில் இருந்து கிடைத்த உதவியுடனே பல்லவ பேரரசு எழும்பியது, அத்தோடு இந்துமதமும் பார்ப்பனரும் எழும்பினர்
(ஈரானிய ஆட்சியாளர்கள், “நெருப்பை வணங்கும், சரதூசரின் தத்துவங்களை பின்பற்றும்” மத நம்பிக்கையாளர்கள்.
ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில், தமது மதத்தை தமக்குள்ளே மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஈரானிய மன்னர்கள் வெளியிட்ட இலச்சினைகளில் எப்படியும் நெருப்பின் படம் பொறிக்கப் பட்டிருக்கும்.
பல்லவர் கால சின்னங்கள் அதனை சொல்கின்றன)
அதன் பின் புலிகேசி மன்னனை கொடூரமானவனாக்கும் கதைகள் எழும்பின
அந்த பல்லவர்களின் காலத்திலேதான், பலம் குன்றிய சோழரிடம் இருந்து காஞ்சி பகுதி பல்லவருக்கு சென்றது. அதன்பின்பே இன்று காணும் பல ஆலயங்கள் எழும்பின, மாமல்லபுரம் கடற்கரை கோவிலும் எழும்பிற்று, அது போல 7 ஆலயம் உண்டு என்பார்கள் மீதி எல்லாம் கடலடிக்கு சென்றாயிற்று
மாமல்லபுர சிற்பங்களும் அப்பொழுதே உருவானது
பின்னாளில் சீன தொடர்புகளில் பல்லவர் புத்தமதத்தையும் அங்கீகரித்திருக்கின்றனர், அது வியாபாரம் இன்னும் சில காரணங்களுக்கு என்கின்றார்கள்
பின்னாளில் பல்லவருக்குபின் இந்துமதமும் பிராமணத்துவமும் அருகிலிருந்த சோழமண்டலைத்தையும் பிடித்தது
அப்படியே நாகூரிலிருந்த விகாரை இலங்கை அனுராதாபுரத்து விகாரை எல்லாம் கொள்ளையடிக்கபட்டு தஞ்சை பெரிய கோவிலாக உருவெடுத்தென
வரலாற்றை உற்று கவனித்தால் நபிபெருமான் வந்து அரபு தேசத்தின் இஸ்லாம் ஈரானை ஆக்கிரமிக்கும் வரை பல்லவ அரசு இங்கு மட்டுமல்ல கம்போடியா வரை நிலைத்திருக்கின்றது
ஆனால் ஈரான் இஸ்லாமயமாக தொடர்பு துண்டிக்கபட்டு இங்கு அது வீழ்ந்திருக்கின்றது.
இன்னும் ஏராளமான வரலாறுகள் கொட்டி கிடக்கின்றன. பல்லவர்கள் என்பவர்கள் இங்கு புத்த சமண மதங்களின் காலத்தில் பிராமணர்கள் அடங்கி கிடந்த காலத்தில் ஈரானியர் உதவியோடு அதாவது ஆரிய நாட்டினர் உதவியோடு இங்கு எழும்பிய அரசு
பின் இந்து சாம்ராஜ்யமாக அது வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக பிராமணர் தென்னகம் முழுக்க அதிகாரம் பெற்றனர்
பிற்கால சேர சோழ பாண்டி மன்னர்கள் எல்லாம் பிராமணருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் அது நாயக்கர் காலம் வரை பின் பிரிட்டிஷ் காலம் வரை தொடர்ந்தது
புத்தமத காலத்தில் தென்னகத்தில் தான் இழந்திருந்த அதிகாரத்தை பிராமணர் பல்லவன் மூலமே மீட்டு பெரியார் காலம் வரை தாக்குபிடித்தனர்
இடையில் திராவிட கட்சிகளிடம் இழந்திருந்த அதிகாரத்தை இன்று மாமல்லன் எச்.ராசா மூலம், நரசிம்ம பல்லவர் எஸ்.வீ சேகர் மூலம் எல்லாம் முயற்சிக்கின்றனர், அவர்களுக்கு ஆதரவாக டெல்லி பல்லவர்களும் இருக்கின்றனர்
இனி என்னாகும் என்பது காலத்தின் கையில் இருக்கின்றது
ஈரான் எனும் சொல்லுக்கு ஆரிய பூமி என்றே பொருள், இதனால்தான் ஹிட்லர் காலத்தில் கூட அரேபிய ஆதரவு யூதவெறுப்பு ஆரிய உறவு என அப்பகுதி ஆதரவு ஹிட்லருக்கே இருந்தது
மதங்கள் மாறினாலும் கலாச்சார தொடர்பு இருப்பதாக 1940வரை கூட நம்பினார்கள்
ஆக பல்லவர்கள் இங்கு பிராமண அதிகாரத்தை மூட்டு கொடுக்க ஈரானில் இருந்து வந்த ஆரிய கூட்டமே தவிர வேறு ஒன்றுமல்ல