பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள்
நாம் பொங்கல் பண்டிகை பற்றி சொன்னதற்கு அதாவது கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கொண்டாடா நிலையில் அவர்களுக்கு ஏன் பொங்கல் பரிசு என சொன்னதற்கு பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள்
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அவர்களுக்கு பைபிளே ஒழுங்காக தெரியவில்லை அல்லது படிக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகின்றது பரிதாபம்
நாம் என்ன சொன்னோம், பொங்கலின் பிரதானம் சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு, பொங்கலின் முதல் தத்துவமே அதுதான். எந்த கிறிஸ்தவன் இயேசுவினை விட்டு இன்னொரு விஷயத்தை வணங்குவான்?
வணங்கட்டும் பார்க்கலாம், மாட்டார்கள். முதலில் இயேசுவே தான் கடவுள் அல்ல எனக்கு மேல் தந்தை உண்டு என சொல்லிகொண்டே இருந்தார் அவரை ஒரு பயலும் தேடவில்லை, அவரும் இவர்களை தேடவே இல்லை
நாம் பொங்கல் பற்றி சொன்னதற்கு அது அறுவடை விழா என்றார்கள், நல்லது
நம்மிடம் திரும்ப ஒரு வரி அதாவது பைபிளிலே பழைய ஏற்பாட்டி அறுவடை விழா உண்டு, பழைய ஏற்பாட்டில் கடவுள் சொன்ன 7 பண்டிகைகளில் அறுவடை விழா உண்டு அதைத்தான் பொங்கல் என கொண்டாடுகின்றோம் என சொன்னால் நாம் பதில் பேசியிருக்க முடியாது
ஆனால் அதை ஒரு பயலும் சொல்லவில்லை
பைபிளின் பத்து கட்டளை, தசம பாக காணிக்கை, சாபமிடும் வசனத்தை எல்லாம் கவனமாக படிப்போருக்கு அந்த அறுவடை பண்டிகை தெரியவில்லை என்பதுதான் சோகம்