பல குட்டிசாத்தான்கள் தறிகெட்டு ஓடுகின்றன

மாந்ரீக தொடர்புடையவர்களை கேட்டால் சில விஷயங்களை சொல்வார்கள், அதாவது மந்திரவாதி சில குட்டிசாத்தானை வைத்து விளையாடுவானாம், அவற்றிற்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பானாம்

மந்திரவாதி திடீரென செத்துவிட்டால் குட்டி சாத்தான்களுக்கு வேலை கொடுக்க ஆளிருக்காது. குட்டி சாத்தான்கள் சும்மா இருந்து பழக்கபட்டவை அல்ல என்பதால் அது பாட்டுக்கு எங்காவது சென்று அடிவாங்குமாம், சில நேரம் அதுகளே அவற்றிற்குள் முட்டிகொள்ளுமாம்

இப்படி அரசியலில் ஏகபட்ட குட்டிசாத்தான்களை வைத்திருந்தவர் நடராசனும் சசிகலாவும்.

மந்திரக்கோல் ஜெயா மரித்ததும், இன்னொரு மந்திரவாதி நடராசன் போனதும், உப மந்திரவாதி சிறையில் கட்டுபட்டு இருப்பதும் சிக்க‌லாயிற்று

இதனால் பல குட்டிசாத்தான்கள் தறிகெட்டு ஓடுகின்றன, வைகோ எனும் குட்டிசாத்தான் அது பிடிபட்ட இடத்திற்கே ஓடிற்று, சைமன் கோஷ்டி இன்னும் பல கோஷ்டி என்ன செய்ய என தெரியாமல் திணறுகின்றன‌

இப்பொழுது திவாகரனும் தினகரனும் அடிக்க ஆரம்பித்தாயிற்று, சசிகலா ஏன் அவசரமாக சிறைக்கு சென்றார் என்பதும் புரிகின்றது. உப மந்திரவாதிக்கு இவைகள் கட்டுபடவில்லை

இப்பொழுது திவாகரனும் தினகரனும் ஆளாளுக்கு திட்டிகொள்வதை கேட்டால் காதில் தேன் வந்து பாய்கின்றது

குட்டிசாத்தான்கள் அடித்து கொள்வதில் மாய மந்திரவாதியின் ரகசியம் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றது