பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன
இப்பொழுதெல்லாம் பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன, ஒரு படமும் விடுவதாக இல்லை, அப்படிபட்ட அபார வசனங்கள்
சிலவற்றில் ராமசந்தின ஈஈ என இளித்து கொண்டிருக்கின்றார், அத்தோடு வின் ஜாணகியும் மருத நாட்டு இளவரசியில் ஆடிகொண்டிருக்கின்றார், கலைஞரின் வசனத்திற்காக அவர்களை பொறுத்துகொண்டாயிற்று
அன்று வருங்கால முதலமைச்சர்களுக்கு வசனம் எழுதுகின்றோம் என்பது கலைஞருக்கும் தெரிந்திருக்காது, வருங்கால சகாப்தம் தங்களுக்கு வசனம் தருகின்றது என அந்த நடிப்பு தம்பதிக்கும் தெரிந்திருக்காது
காலம் என்னவெல்லாமோ விளையாட்டு ஆடியிருக்கின்றது
அக்காலத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கலைஞர் அபிமன்யு போன்ற படங்களுக்கும் எழுதியிருக்கின்றார்
அது மகாபாரத கதைதான், ஆனால் அட்டகாசமாக எழுதியிருக்கின்றார் கலைஞர்
உண்மையில் பாரத கதையினை ஆழபடிக்காத ஒருவனால் அப்படி எழுதவே முடியாது. அந்த அளவு அவர் நுணுக்கமாக படித்திருக்கின்றார்
நிச்சயம் அவருக்கு இந்துமத நூல்கள் எல்லாம் அத்துபடி , அவ்வளவு படித்திருக்கின்றார், பல படத்து வசனங்கள் அதை அட்டகாசமாக சொல்கின்றன. நிச்சயம் அவர் ஆழமாக அவற்றை படித்திருக்கின்றார்
ஆனால் நாத்திகராகிவிட்டார்
ஒருவேளை ஆத்திகராக இருந்தால் என்னாகியிருப்பார்? இந்த உயரத்தை எட்ட அம்மதத்தின் சாதியும் இன்னபிற கட்டுபாடுகளும் விட்டிருக்குமா?
சாதாரண பக்திமான் வசனகர்த்தாவாக அவர் வாழ்வு கழிந்திருக்கும்,
அந்த மதத்தில் பெரும் ஞானம் பெற்றிருந்தாலும் காஞ்சி சங்கராச்சாரி இடத்தையோ, கிருபானந்தவாரி இடத்தையோ அவரால் எட்டியிருக்க முடியுமோ? விட்டிருப்பார்களா?
நிச்சயம் சந்தேகம்
இந்துமதத்தின் சாதி கட்டுபாடும் இன்னபிற இறுக்கமும், மிகபெரும் அறிவாளியினை அதாவது மிகபெரும் சமயஞானியாக வந்திருக்க வேண்டிய ஒருவனை மாபெரும் ஆத்திகராக்கி அவனை வரலாற்றில் முத்திரை பதித்த சகாப்தமுமாகவும் ஆக்கிற்று
தன் சொந்த மதத்தில் சில கட்டுபாடுகளை தன் பிறப்பால் பெறமுடியாத கலைஞர், அதை எதிர்த்து மாபெரும் இடத்தை வரலாற்றில் பெற்றுகொண்டார் என்பதுதான் அவரின் சாதுர்யம்.