பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்

Image may contain: 4 people, beard and selfie

பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் என ஒரு பரபரப்பு ஏற்பட்டது

விஷயம் என்னவென்றால் அவர்கள் சொல்வது இதுதான், அந்த வாலிபர்கள் 4 பேரும் காரில் ஏறி காவேரி மருத்துவமனை செல்ல முயன்றார்களாம், வழி தெரியவில்லையாம்

இந்நேரம் பழனிச்சாமி காவேரிக்கு செல்வார் எனும் செய்தி கிட்டியிருக்கின்றது, முதலமைச்சர் கார் பின்னால் சென்றால் காவேரியினை அடைந்துவிடலாம் என பின் சென்றிருக்கின்றார்கள்

ஆனால் முதல்வர் காவேரியிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்திருக்கின்றார், ஆனால் இவர்களோ அவர் மருத்துவமனைக்கு செல்கின்றார் என அவர் வீட்டிற்கு உள்ளே காரோடு நுழந்திருக்கின்றார்கள்

அதற்குள் போலிஸ் தடுத்துவிட்டது, இல்லாவிட்டால் எங்கே கலைஞர் என உள்ளே ஓடி தேடியிருப்பார்கள்

முதல்வர் வீட்டில் அத்துமீறல் என்றால் சும்மாவா?

நக்சலைட் கும்பல் , தினகரன், சசிகலா முதல் மன்சூர் அலிகான், சீமான் அட பன்னீர் கோஷ்டி வரை முதல்வருக்கு எத்தனை எதிரிகள்?

இதனால் காவல்துறை அவர்களை முறைபடி விசாரிக்க இவ்வளவு விவரம் தெரிந்திருகின்றது

ஆனாலும் பழனிச்சாமிக்கு இந்த அலம்பல் மிக‌ அதிகம்தான்

அவர் பின்னால் இப்படி வழி தவறி வந்த 4 பேர் இல்லாமல் மொத்த தமிழகமுமா திரண்டு வரும்?

வழிதவறி 4 பேர் பழனிச்சாமி பின்னால் வந்ததே பெரிய விஷயம், அவர்களை பிடித்து ஆனந்த கண்ணீர் விடாமல் இப்படியா பழனிச்சாமி மிரட்டுவார்?