பழனி நவபாஷாண சிலை தமிழரின் தனிபெரும் அடையாளம்
பழனி நவபாஷாண சிலை தமிழரின் தனிபெரும் அடையாளம் பழனி கோவிலும் அந்த நவபாஷான சிலையும்
போகர் எனும் மாபெரும் மருத்துவ சித்தர் அமைத்த சிலை அது, 9 கடும் விஷங்களை கொண்டு அமைக்கபட்ட சிலை அது அதில் ஊற்றபடும் பால் ஆனால் அருமையான மருந்து
போகர் எனும் சித்தர் அந்த மாபெரும் ரகசியத்தை தன் குடும்பத்திற்காவோ தனக்கு வேண்டியவர்களுக்காகவோ விட்டு செல்லவில்லை
எல்லா மக்களும் பலன் பெறும் பொருட்டு சுவாமியின் சிலையாகவே அந்த ரகசியத்தில் உருவான சிலையினை உலக மக்களுக்காக செய்தார்
மிக பெரும் மருத்துவ தத்துவமும், வியப்பும் கொண்டது அச்சிலை
ஆன்மீகத்தில் அட்டகாசமான அறிவியிலை புகுத்தினார்கள் தமிழர்கள் என்பதற்கு பழனி ஆலயத்தின் அச்சிலை பெரும் சான்று
அதற்கு முதலில் ஆபத்து ஜெயா வடிவில் வந்தது, அவருக்கு கேடுகெட்ட ஆலோசனை சொல்வது ஜோதிடர்கள் அது அப்படி இருப்பது அரசுக்கு ஆகாது என சொல்லி மாற்ற சொன்னார்கள்
இது இந்தியா எனும் நாடு இதில் மாநில முதலமைச்சருக்கு என்ன ஆபத்து என்பதுதான் புரியவில்லை
அதன் பின் ஐம்பொன் சிலை ஜெயாவால் வழங்கபட்டது இச்சிலை மறைக்கபட்டது, அப்பொழுது பழனிகோவிலில் நடந்த கொடுமைகள் எல்லாம் இறைவனுக்கே அடுக்காதவை
அதன் பின் தேர்தலில் அடிவாங்கிய ஜெயலலிதா பின் அந்த ஐம்பொன் சிலையினை எடுத்துவிட்டு நவபாஷான சிலையினையே அனுமதித்தார்
ஜெயா மர்மமாக செத்ததில் இப்படி பல ஆலய சாபமும் உண்டு, ஆணவத்தில் அவர் செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல
இப்பொழுது நவபாஷான சிலைக்கு சிக்கல் என்கின்றார்கள், கடத்தல் முயற்சி என்கின்றார்கள்
தஞ்சாவூர் கோவிலில் ராஜராஜன் சிலை கடத்தல், இப்பொழுது பழனி கோவிலில் மிக பிரசித்த பெற்ற சிலைக்கே சிக்கல் எனும்பொழுது இந்த தமிழகத்தை எண்ணி நாணத்தால் தலைகுனிய வேண்டி இருக்கின்றது
தன் சொந்த பழம் பெருமையினையும், உயரிய அடையாளங்களின் பாரம்பரியத்தையும் உணராத ஒரு இனம் ஒரு நாளும் உருப்படாது
அம்மனிதன் நாத்திகன் என்றாலும் திருச்செந்தூர் ஆலய வேலுக்காக பெரும் போராட்டமே நடத்தினான், கால் வலிக்க வலிக்க அவர் நடந்த நடை கொஞ்சமல்ல
இன்று அவரின் சீமந்த புத்திரனுக்கோ, அக்கட்சியின் செயல் தலைவருக்கோ இதனை பற்றி எல்லாம் கொஞ்சமும் அக்கறை இல்லை
பழனிச்சாமி ஆட்சியில் பழனியின் சாமி சிலைக்கே ஆபத்து என அரசியல் செய்யவும் அவருக்கு தெரியவில்லை
முப்பாட்டன் முருகன் என குதித்த திடீர் தமிழர்களுக்கும் பழனி சிலை மேல் அக்கறை இல்லை
அறுபடை வீடு ரதம், ராமர் கோவில் ரதம் என வண்டி ஓட்டி விலையாடும் அந்த இந்து காவலர்களுக்கும் கொஞ்சமும் சிலை பற்றி கவலை இல்லை
தமிழகத்தில் எஞ்சி இருப்பது அந்த பழம் பெருமைகள் மட்டும்தான் அதனையும் புதைக்க கிளம்பியாயிற்று
இச்செய்திகள் எல்லாம் கேட்கும்பொழுது தமிழகத்தையும் அதன் சிறப்பு தொன்மையும் உணர்ந்தோர், அதன் பாரம்பரியத்தை எண்ணி பெருமை கோள்வோர் எல்லாம் கண்ணீர் சிந்துகின்றனர்
விரைவில் மகாபலிபுரம் சிற்பமும் ஒவ்வொன்றாக கடத்தபடலாம், சித்தன்னவாசல் ஓவியம் பாறையோடு பெயர்த்தெடுத்து விற்கபடலாம்
இன்னும் தமிழகத்தில் இழப்பதற்கு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை
மாபெரும் வாழ்வு வாழ்ந்த சமூகத்தின் சில அடையாளங்கள் மட்டும் எஞ்சின , அவற்றை நாம் ஏக்கமுடன் பார்த்துகொண்டோம்
அடுத்துவரும் தலைமுறைக்கு அந்த அடையாளங்களை கூட காட்டமுடியா பெரும் கொடும்காலம் வந்துவிட்டது
அடுத்த தலைமுறைக்கு மிக பெரும் துரோகம் செய்துகொண்டிருக்கின்றோம்
இந்த உலகத்தின் மொத்த பணத்தையும் கொட்டி கொடுத்தாலும் அச்சிலை போல் இன்னொன்று வாங்க முடியுமா? உருவாக்க முடியுமா?
அதன் அருமையும் பெருமையும் அப்படி.
பெரியார் சிலையினை விட மகா முக்கியம் பழனி மூலவர் சிலை என்பதில் எந்த சந்தேகமுமில்லை
ஏதேனும் செய்து அச்சிலை விவகாரத்தை வெளிகொண்டுவர வேண்டியதும் அதனை காக்க வேண்டியதும் அதனை வருங்கால தலைமுறைக்கு மகா பத்திரமாக விட்டு செல்வதும் நம் கடமை