பழமொழி நானூறு : 03

“விளக்கு விலை கொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்கு
மருள் படுவது ஆயின் மலை நாட என்னை
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள்”

விளக்கினையும் அதன் திரி முதலான நெய்யினையும் விலைகொடுத்து வாங்குவதே நல்ல வெளிச்சத்தை பெறத்தான், அந்த வெளிச்சத்தில் எல்லா பொருளையும் தெளிவாக காண்பதற்குத்தான், அப்படி கல்வி என்பதும் நூல்கள் என்பதும் ஞானத்தை தருவதாக இருக்கவேண்டும், மலைநாட்டு மகனே, யாராவது பொருள் கொடுத்து இருள் வாங்குவார்களா?

அப்படி ஞானவெளிச்சம் தராத நூல்களை கற்கலாமா? அதனால் பலன் உண்டா? என்கின்றது பாடல்

அதாவது நூல்களும் கல்வியும் ஞானம்தராவிட்டால் அந்த கல்வியால் பலன் இல்லை என்கின்றார் புலவர்..