பழமொழி நானூறு : 07

“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்-நலம் மிக்க
பூம் புனல் ஊர் பொது மக்கட்கு ஆகாதே
பாம்பு அறியும் பாம்பின கால்”

புலவர் ஒருவனுக்கு போதனை சொல்வதாக அமைகின்றது இப்பாடல்

புலவர் சொல்கின்றார் நல்ல நீர்மிக்க ஊரை கொண்டவனே, அறிவு மிக்கவரை அறிவு மிக்கவரேதான் கண்டு கொள்ளமுடியும் எல்லா மக்களாலும் கண்டுகொள்ள முடியாது

ஒரு பாம்பு எப்படி நகர்கின்றது ஓடுகின்றது என்பது இன்னொரு பாம்புக்குத்தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது, அப்படி கற்ற அறிவாளிகளை, பெரும் ஞானஸ்தன்களை இன்னொரு அறிவாளிதான் அறிந்து கொள்ளமுடியும் என்கின்றார்

அதாவது பணக்காரன் அதிகாரம் மிக்கவனை பார்த்தவுடன் எல்லோரும் அறியலாம் ஆனால் அறிவில் சிறந்தவனை இன்னொரு அறிவாளியால் மட்டுமே அறியமுடியும் என்பது பாடலின் மறைமுக பொருளாகும்

“கற்றோரை கற்றோரே காமுறுவர்” என்பது இதுதான்