பழமொழி நானூறு : 09
“கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட
நிறை குடம் நீர் தளும்பல் இல்”
பாடலில் அருவிகள் கொட்டும் மலைநாட்டவனுக்கு போதிக்கின்றார் புலவர், அருவியின் நீரை கொண்டே அழகான தத்துவத்தை சொல்கின்றார் என்பதில் அவரின் கவிபுலமை தெரிகின்றது
பெரும் ஆர்ப்பரிப்புடன் பாறையில் பாயும் அருவிகளை கொண்ட நாட்டுக்காரனே, கற்று அறிந்த ஞானியர் கொண்டிருக்கும் அடக்கத்தை அறைகுறையாக கற்றோரும் கல்லாதாரும் கொண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் பெருமையினை தானே பேசுவார்கள்
நிறைகுடம் ஆடாமல் அசையாலம் தளும்பாமல் இருப்பது போல முழுக்க கற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். தங்களை தாங்களே புகழ்ந்து பேசமாட்டார்கள் என்கின்றார் புலவர்
“நிறகுடம் நீர் தளும்பல் இல், குறைகுடம் கூத்தாடும்” என்பது இங்கு சொல்லபடும் பழமொழி