பழமொழி நானூறு : 11
“கற்றானும் கற்றார் வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை எற்றேல்,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி”
கற்றவர் சொல்லி தருவதை நேரடியாக படிக்கவோ அல்லது செவியால் கேட்கவோ வாய்ப்பு இல்லாதவர்கள் தங்களை கற்றவர்கள் என சொல்லிகொண்டாலும் தெளிவான அறிவோ ஞானமோ கொண்டிராதவர்கள், அவர்களை கற்றவர்கள் என சபையோர் ஒப்புகொள்ளமாட்டார்கள், அப்படி முறையாக கல்லாமல் தனக்கு அறிவு இருக்கின்றது என ஒருவன் சொல்லி திரிந்தாலும் அது நாவல் மரத்தில் ஏறி பழம்பறிக்காமல் மரத்தடியில் தானே விழுந்துகிடந்த பழத்தை எடுக்கும் திறமையில்லா நிலையாகவே கருதபடும்
இந்த உவமை அழகானது
அதாவது நாவல்மரத்தில் ஏறி இனிய கனிகளை கொய்தல் என்பது திறமை அந்த கனியினை தயக்கமின்றி உண்ணலாம், ஆனால் தானே கீழே விழுந்த கனியினை மண் நீக்கி நீரில் கழுவி , மாசு நீக்கி மிக சிரமபட்டுத்தான் பயன்படுத்தமுடியும், சிலசமயம் அதனை பயன்படுத்தவும் முடியாது கல்லாதோர் கல்விஅப்படியானது என்கின்றார் புலவர்
“கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்”
என வள்ளுவன் சொல்வதும் இதுதான்
இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், முறையாக சமஸ்கிருதம் கற்காமலும் சமஸ்கிருத பண்டிதர்களிடம் விளக்கம் கேட்காமலும் அந்த அறிவு கொஞ்சமும் இல்லாமலும் தனக்கு தன்னையே ஆசானாக கொண்டு சிலர் மனுநீதி, வேதம் என பலவற்றுக்கு விளக்கம் கொடுத்துகொண்டிருக்கின்றார்கள் அல்லவா அப்படி
இப்படியான கோஷ்டியினை கொஞ்சமும் அறிவுடையோர் மதிக்கமாட்டார்கள், அவர்களை மதித்தால் உருப்பட முடியாது, உண்மை தெரியாது என்பதுதான் பாடலின் தத்துவம்