பழமொழி நானூறு : 22
“மானமும் நாணும் அறியார் மதி மயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்கு தாம் இருந்து
ஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும்
யானைப் பல் காண்பான் புகல்”
கொஞ்சமும் கல்வியும் அறிவும் இல்லாத ஒருவன், தன்னுடைய மானம் நாணம் இவை எல்லாம் பற்றி கவலை இல்லாதவன், அப்படி ஒன்று இருப்பதாக அறியாதவன் தானும் புகழ்பெற வேண்டும் என்ற மயக்கத்தில் கற்றவரும் ஞானியரும் இருக்கும் அவையில் புகுந்து வாதிடுவது என்பது நகைப்புக்குரியது
அது எப்படியானது என்றால், பட்ட பகலில் மாட்டின் பல்லை பார்த்து வயதை கணிப்பதை போல யானையின் பல்லை பார்க்க துணிவது போலாகும் என்பது பாடலின் பொருள்
மாட்டின் வாயினை பிடித்து பல்லை பார்தது வயதை கணிப்பார்கள், அப்படி யானையின் பல்லை பார்த்து வயதை கணிக்க அதன் பல்லை பிடிப்பது எப்படி ஆபத்தோ அப்படி கற்றவர் நிரம்பிய அவையில் கல்லாதவன் வந்து வாதிட்டு புகழ அடைய நினைப்பது என்கின்றார் புலவர்