பழமொழி நானூறு : 23
“அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க – கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல்”
அல்லன செய்யும் மூடர்கள், கல்லாதவர்கள், புல்லறிவாளர்கள் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் கற்றவர் நிரம்பிய அவையில் நுழைந்து, தனக்கு எல்லாம் தெரியும் என பெரும் அறிவு மிக்கோரை ஏளனமாக பேசி அவர்கள் வருந்தி மவுனமாவது என்பது அந்த மூடன் உளுந்து என நினைந்து மிளகு புழுவினை உண்ணுதல் போன்றது என்கின்றார் புலவர்
மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் சில நேரம் நச்சு புழுக்கள் மிக சிறியதாக இருக்கும் என்பார்கள், உளு என்றால் உளுத்து போகுதல் அல்லது செல்லரித்து போகுதல் என பொருள்
கற்றவர் அவையில் கல்லாதவன் நுழைந்து அதிகம் பேசி அவர்களை வருத்தினால் அவன் பெரும் அழிவை அடையான் என்பது பாடலின் பொருள்