பழமொழி நானூறு : 33
“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையராயின் திரிந்தும் வருமால்
பெரு வரை நாட பிரிவின் றதனால்
திருவினும் திட்பமே நன்று”
அரிய விலை மதிப்புடைய சிறந்த அணிகலன்களும், நிறைந்த செல்வமும் ஒருவனின் ஊழ்வினையினை பொறுத்து தகுதி இல்லாமல் வந்து சேரும், அதாவது பொல்லாதவனுக்கும் அறிவில்லாதவனுக்கும் கூட ஊழ்வினை காரணமாக பரம்பரை சொத்தோ இல்லை குறுக்குவழியிலோ பணமும் பொருளும் வந்து சேரும்
அப்படிபட்டவனை உலகம் ஒரு பொருட்டாக கருதாது அவனை சிறந்தவன் என ஒப்பாது, எவன் எக்காலமும் அறிவான வழியில் நிலையாக நிற்பானோ அவனையே உலகம் பெரிதென கருதி வணங்கும்
செல்வம் தகுதி இல்லாதவனுக்கும் ஊழ்வினை பொறுத்து வரும் போகும், அது ஒருவனுக்கு தகுதியாகாது, அறிவுடமையில் நிலைத்து நிற்றலே நல்ல தகுதியினை பெற்று தரும் என்பதால் அறிவுடமையே சிறந்தது என்பது பாடலின் பொருள்