பழமொழி நானூறு : 67

“தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றி
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல்”

தாய் தந்தையர் தன் பிள்ளையினை பெருமையாய் பேசுதல் இயல்பு ஆனால் அந்த இயல்பையும் பெரிதாக சொல்லி கொண்டே இருந்தால் அதை கேட்டு பிள்ளைகளும் தங்களை தாங்களே புகழ தொடங்கினால் அதனால் யாருகும் ஆபத்தில்லதான் ஆனால் அது அடுப்பில் முடங்கி கிடக்கும் நாயினை புலி என சொல்வது போல் இகழ்ச்சிகுரியதாகும் என்பது பொருள்.

தன்னை தானே புகழ்தல் என்பது நோய் எனும் ஆபத்து இல்லை என்றாலும், வெற்று அடுப்பில் முடங்கும் நாயினை புலி என சொல்வது போல் இகழ்ச்சியானது

நாய் எப்பொழுது எரியாத அடுப்பில் முடங்கும் என்றால் , அதுவரை வீரமாக குரைக்கும் நாய் பெரும் ஆபத்தை கண்டுவிட்டால் அடுப்பிற்குள் முடங்கி ஒளியும்

தகுதியில்லாரை புகழ்ந்தால் தக்க நேரத்தில் அஞ்சி ஒளிந்து பெரும் அவமானபடுவர் என்பது பாடலின் இன்னொரு பொருள்