“பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி
தனுஷின் “பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி. நிச்சயம் அது ரஜினிக்கானது , அவர் மட்டும் நடித்திருந்தால் படம் இன்னும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ரஜினி சினிமா உலகில் இன்னொரு மைல்கல் ஆகியிருக்கும்
ஆனால் தன் தலையில் தானே கல் தூக்கி போட காலாவில் மேக் அப் இல்லாமல் ஆனால் தலையில் விக்குடன் வந்து நிற்கின்றார் ரஜினி
ரஜினி வந்தால் கமல் வரவேண்டும் என்பது சினிமா விதி , ஆனால் கமல் இப்பொழுது மய்ய பிசி என்பதால் அவர் அண்ணன் சாருஹாசன் வந்திருக்கின்றார்
அவர் தாதாவாக, சிரிக்காமல் படியுங்கள், ஆம் அவர் கொடூர தாதாவாக நடிக்கும் “தாதா 87” எனும் படத்தின் டீசர் வந்துவிட்டது
நல்ல வேளையாக ரஜினியின் விரா, தளபதி போன்ற படங்களில் அவர் அர்ச்சகராக வந்துவிட்டார். அந்த படங்களிலே ரவுடியாக வாயில் சுருட்டு புகைய, கையில் கத்தியோடு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
இந்த டிராபிக் ராமசாமி படத்தில் நடிக்க வேண்டிவர் சாருஹாசன், நிச்சயம் பொருந்தியிருப்பார். ஆனால் அவர் தாதாவாகத்தான் நடிப்பாராம்
ஒருவேளை ரஜினியினை பகிரங்கமாக கலாய்க்கும் வேலையில் கமல்தரப்பு இறங்கி இருக்குமோ? அப்படித்தான் இருக்கின்றது
“காலா..” ரஜினியினை இதனை விட எப்படி கலாய்த்துவிட முடியும்?
படத்தில் சாருஹாசனின் ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டியினை போட்டு விஜய் போன்றவர்களை சீண்டவும் அவர் தவறவில்லை
படத்தை உற்றுபார்த்தால் கமலஹாசன் வயதானவர் கெட்டப்பில் வந்து நடித்து ரஜினியினை கலாய்த்துவிட்டு சாருஹாசனை இழுத்துவிட்டிருக்கலாமோ? என்ற சந்தேகம் வலுக்கின்றது
அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது