பாகிஸ்தானின் தேசிய மொழியில் ஒன்றாக்கிவிட்டது சீன மொழி …

உலக தாய்மொழி தினத்தை ஒவ்வொரு நாடும் உற்சாகமாக கொண்டாட, பாகிஸ்தான் மகா சோகத்தில் அனுசரித்திருக்கின்றது

யாருக்கும் ஏற்பட கூடா அவமானம் பாகிஸ்தானுக்கு நடந்துவிட்டது, பாகிஸ்தான் சீனாவின் கூட்டாளி என முதலில் சொன்னது, பின் அடிமை ஆனது , இன்று கொத்தடிமை ஆகிவிட்டது

அதாகபட்டது பாகிஸ்தானின் தேசிய மொழிகளில் ஒன்றாக சீனாவின் மாண்டரின் மொழி அறிவிக்கபட்டாயிற்று. மாண்டரினுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை லட்சம் சீன மக்கள் வசிக்கின்றார்கள்? அவர்கள் என்ன பூர்வ குடிகளா? என்றால் இல்லை, பின்னர் ஏன்?

சீனா தன் டிராகன் கால்களை பல நாட்டில் வைத்து ஆக்கிரமித்தாயிற்று, அதில் பாகிஸ்தானும் ஒன்று. தீவிரவாதம் தொடர்பாக மேற்குநாடுகள் கைவிட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு ஆறுதலும் இல்லை

இந்நிலையில் சீனா தன் பிடியினை இறுக்கி தன் மொழியினை பாகிஸ்தானின் தேசியமொழியில் ஒன்றாக்கிவிட்டது

விருப்பமில்லை என்றாலும் முடியாது என சொல்லமுடியா அளவிற்கு இருக்கின்றது கடன் வாங்கி தன் கழுத்தை சீனாவிடம் கொடுத்துவிட்ட பாகிஸ்தானின் நிலை

விஷயம் பாகிஸ்தானில் சிக்கலாகின்றது, காரணம் பாகிஸ்தானின் சிறுபான்மையினரான ஆனால் பாகிஸ்தான் குடிமக்கள் பேசும் பஷ்டூன், ஹிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகளுக்கு இன்னும் அங்கு தேசியமொழி அங்கீகாரம் இல்லை

சொந்த மக்கள் மொழியினை விட்டுவிட்டு அந்நிய மொழிக்கு தேசிய அந்தஸ்தா என கொந்தளிக்கின்றது பாகிஸ்தான்

ஆக இந்தியாவிற்கு எதிரி தன் நண்பன் என அரசியல் பேசிய பாகிஸ்தான் வஞ்சக சீனாவிடம் வசமாக சிக்கிவிட்டது

இந்திய எதிர்ப்பு என்ற ஒன்றையே கொண்டு உலக அரசியல் செய்த பாகிஸ்தானின் நிலை பரிதாபத்திற்குரியது, இனி அதனை மீட்டெடுக்க இந்தியாதான் உதவ வேண்டும் போலிருக்கின்றது