பாகிஸ்தானும் ஏவுகனை சோதனையினை செய்தாயிற்று
அரசியல் குழப்ப நிலை, ஆங்காங்கே போர் சூழல் என்ற நிலையில் பாகிஸ்தானும் நாங்களும் இவ்வுலகில் உண்டு என காட்ட ஏவுகனை சோதனையினை செய்தாயிற்று
அவர்கள் ஏவுகனை ஆராய்ச்சி எல்லாம் வெகு சிம்பிள், சீனாவின் ஏவுகனைகளை வாங்கி ஏதாவது பெயர் எழுதி பறக்கவிடுவார்கள்.
ஆனால் பெயர் வைப்பதில்தான் அவர்களின் கோபமும், குயுக்தியும் தெரியும்
எந்த இஸ்லாமிய மன்னன் எல்லாம் இந்தியாவினை வென்றானோ அவன் பெயரை அட்டகாசமாக சூட்டுவார்கள்
அதில் முக்கியமானது கோரி ரகம். கோரிமுகமது எனும் கொடியவனின் நினைவாக அதனை சூட்டியிருக்கின்றார்கள். அவர்களிடம் உள்ள முக்கிய கனை அது
ஷாகின், அப்தாலி என சில அக்கால இந்திய எதிர்ப்பு தளபதிகள் பெயரையும் சில குட்டி ஏவுகனைகளுக்கு சூட்டியிருக்கின்றார்கள்.
கஜினி பெயரை சூட்டியதாக தெரியவில்லை, ஒரு ஏவுகனைக்கு 17 ஏவுகனை எறியவேண்டும் என அஞ்சினார்களோ என்னமோ?
இப்பொழுது சூட்டபட்டிருக்கும் ஏவுகனை பெயர் பாபர், அதன் தாக்குதல் தூரம் லாகூர் அல்லது கராச்சியில் இருந்து அயோத்தி வரை அட்டகாசமாக வருகின்றது
பாகிஸ்தானிலும் குசும்பர்கள் உண்டு என்பது தெரிகின்றது
இனி அடுத்து வரும் ஏவுகனைகளுக்கு என்ன பெயர் சூட்டுவார்களோ தெரியாது எனினும் தைமூர், நாதிர்ஷா என ஏராளமான பெயர்கள் பாக்கி இருக்கின்றது
இந்தியா கோரியினை எதிர்த்த பிரித்வி ராஜன் நினைவாக ஒரு ஏவுகனைக்கு பிரித்வி என பெயரிட்டதோடு இந்த விளையாட்டிற்கு வரவில்லை
(ஆனால் அவர்கள் பாபர் என பெயர் வைத்தால் இவர்கள் ராமர் என வைத்து தொலைத்துவிட கூடாது. அப்படி வைப்பதும் சரியல்ல யுத்த காலத்தில் ராமர் கனை வீழ்ந்தது என்றால் கேட்க நன்றாய் இராது
இவர்கள் ஒருமாதிரியானவர்கள் என்பதால் ராமர் வைத்தாலும் வைப்பார்கள்)
பாகிஸ்தானை அலற வைத்த எத்தனையோ ராணுவ தளபதி மானெக்ஷா போல் உண்டு, அவர்கள் பெயரை வைக்கலாம்
இப்பொழுது கலாம்பெயரில் கே ரக ஏவுகனைகளை இந்தியா தயாரிப்பது இன்னொரு விஷயம்
முன்பெல்லாம் பாகிஸ்தான் அலறவேண்டும் அவ்வளவுதானே, மோடி பெயரை சொல்லுங்கள் என்றெல்லாம் பக்தாஸ் சொல்லிகொண்டிருந்தார்கள்
இப்பொழுது ஏதும் இந்திய ஏவுகனைக்கு மோடி பெயர் சூட்டட்டுமா என கேட்டால் அவர்களுக்கே விருப்பமில்லை
மோடி பெயரை ஏவுகனைக்கு சூட்டினால் பாகிஸ்தானுக்கே பயம் விலகிவிடும் என்பதால் அப்பெயர் சூட்டபடாது.