பாகிஸ்தான் தேர்தல்
இரண்டாக பிரிந்தாலும் ஜெர்மன் என்பது மேற்கு ஜெர்மன் கிழக்கு ஜெர்மன் என இருந்தது, கொரியா வடகொரியா தென் கொரியா என்றிருகின்றது.
ஆனால் இந்தியா மட்டும் இந்தியா பாகிஸ்தான் என பிரிந்தது, அதாவது பிரிக்கும்பொழுதே இது இரண்டும் இணைய கூடாத நாடுகள் என முடிவு செய்திருக்கின்றார்கள்
இந்தியாவிற்கு ஊழலும், பாகிஸ்தானுக்கு ராணுவ ஆட்சியும் சாபக்கேடுகள். இந்தியாவில் ஒரு நாளும் ராணுவ ஆட்சி வராது என்பதும் பாகிஸ்தானில் ஊழல்வாதிகள் விரட்டி அடிக்கபடுவார்கள் என்பதும் ஒருவகையில் வினோதம்
அப்படிபட்ட பாகிஸ்தானில் நாளை தேர்தல் நடக்கின்றது, இப்போதைக்கு நவாஸின் கட்சியும் , இம்ரான் கானின் கட்சியும் களத்தில் உள்ளது
இந்தியாவின் நேரு குடும்பம் போல பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம் பிரசித்திபெற்றது ஆனால் ராகுல் போல பெனசிரின் மகனால் வரமுடியவில்லை காரணம் பெனசரின் கணவரின் விளையாட்டு மன்னார்குடி குடும்பத்து கதைபோல இருந்தது
தினகரன் போல மக்கட் செல்வன் என வர அவருக்கும் திறமையில்லை, வந்தாலும் பாகிஸ்தான் மக்கள் விடுவதாக இல்லை
பெனசிரின் மகனும் மு.க ஸ்டாலின் போலவே ஆகிவிட்டார், மொத்ததில் அக்கட்சி விஜயகாந்த் கட்சி போல ஆகிவிட்டது
இந்நிலையில் இம்ரான்கானுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
யார் வென்றால் என்ன?
பாகிஸ்தான் ஆட்சியினை ராணுவம் கவனிக்கும், ராணுவத்தை உளவுதுறை கவனிக்கும், இது போக நீதிமன்ற கவனிப்பும் உண்டு எல்லாவற்றிற்கும் மேல் வல்லரசுகளின் கண்ணசைவும் உண்டு
பாகிஸ்தானின் நிலை சொல்லிகொள்ளும்படி இல்லை, ஹக்கானி குரூப், தாலிபான் எல்லாம் மிக வலுவாக வடக்கு பகுதியில் நிலைபெற்றுவிட்டன, பாகிஸ்தான் அரசே அங்கு செல்லாது
நிதி நெருக்கடி, தீவிரவாதம் என இன்னபிற சிக்கல்களில் அந்நாடு சிக்கி தவிகின்றது. நிச்சயம் வரபோகும் பிரதமருக்கு சவால் காத்திருக்கின்றது
ஆயினும் அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் இந்தியா. அதை அடிப்போம் உடைப்போம் காஷ்மீரை மீட்போம் என சொல்லியே ஆட்சி செய்யலாம். இதுவரை அப்படித்தான் செய்தார்கள்
அவர்கள் செய்யாவிட்டால் உடனே ராணுவம் ஆட்சியினை பிடித்து அதே பல்லவியினை பாடும், அப்பொழுதுதான் தீவிரவாத குழுக்கள் முதல் பல சக்திகள் அமைதியாகும்
உலகம் அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என எதிர்பார்க்கின்றதோ இல்லையோ பிரதமர் மோடி மகா உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கின்றார்
எதற்கு?
திடீரென முன் அறிவிப்போ அழைப்போ இல்லாமல் சென்று இறங்கி கட்டி பிடித்து வாழ்த்து தெரிவிப்பார், அதில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்