பாகுபலி படத்திற்கு கன்னடர்கள் எதிர்ப்பு

பாகுபலி படத்திற்கு கன்னடர்கள் எதிர்ப்பு, அங்கு படம் வெளியாவதில் சிக்கல்

படத்தினை கன்னடர்கள் எதிர்க்க பலகாரணம் உண்டு என சொல்லபடுகின்றது, முதற்காரணம் சத்ய்ராஜ் காவேரி கேட்டவராம் அதனால் எதிர்ப்பார்களாம்

சரி இந்த பிரபாஸ், அனுஷ்கா எல்லாம் பெங்களூரையா கேட்டார்கள்?

விஷயம் அதுவல்ல, கட்டப்பா எனும் பெயர் நஞ்சப்பா, பங்காரப்பா, பசவப்பா, எடியூரப்பா, நிஜலிங்கப்பா வரிசையில் இருப்பதால் கட்டப்பா என்பவன் கன்னடன் என யாரோ கொளுத்திபோட்டிருக்கின்றார்கள்

அதனால் பாகுபலியினை கொன்றது கன்னடனா? அவன் விசுவாசம் கெட்டவனா என பொங்குகின்றார்கள்

என்ன கன்னடர்களோ காவேரியினை வெளியில் விடமாட்டார்களாம், பாகுபலியினை உள்ளே விடமாட்டார்களாம்

அப்படி முன்பே இப்படி கட்டுபாடோடு இருந்து அந்த சந்தியாவினையும் அவள் மகளையும் தமிழகம் விடமாட்டோம் என அடைத்து வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

இனியாவது திருந்துங்கள் கன்னடரே, அந்த சரோஜாதேவி எம்ஜிஆர் நூற்றாண்டு என இப்பக்கம் சுற்றிகொண்டிருக்கின்றதாம், முடிந்தால் அவரை கன்னடம் தாண்டி அனுப்பமாட்டோம் என அடைத்து வையுங்கள்

அது வந்து எம்ஜிஆர் புராணத்தை கனத்த மேக்கப்புடன் பாடுவதை சகிக்க முடியவில்லை…..