பாக்.கிற்கு உளவு வேலை பார்த்த விமான படை அதிகாரி கைது

பாக்.கிற்கு உளவு வேலை பார்த்த விமான படை அதிகாரி கைது

இவர்தான் உண்மையான தேசதுரோகி, பாகிஸ்தான் பெண்ணின் வலையில் விழுந்த இவர் அந்த மயக்கத்தில் இவ்வாறான காரியங்களை செய்திருக்கின்றார்.

அவர் யாரென இந்திய ராணுவம் சொல்லவில்லை, சொல்லவும் கூடாது.

இதெல்லாம் அடிக்கடி நடக்க கூடிய விஷயங்கள், ஒருவர் அகபட்டிருக்கின்றார், இன்னும் சிலர் அகபடாமல் இருக்கலாம். விசாரணை படு தீவிரமாக நடக்கின்றது, மேலதிக தகவல்கள் இனி வரலாம்

இவர் இந்திய‌ தேசதுரோகி ஆன நிலையில் அந்த பாகிஸ்தானிய பெண் பாகிஸ்தான் தியாகி ஆனாரா? என்பது பற்றி தகவல் இல்லை

விவகாரம் முகநூல் தொடர்பிலே நடந்திருக்கின்றது என தொடக்க விசாரணை தெரிவிக்கின்றதாம் , அது பாகிஸ்தானின் பேக் ஐடியாக இருக்கலாமோ?