பாக் விமானி நிலை

புதன் கிழமை நடந்த மோதலில் இந்திய விமானம் ஒன்றும் பாகிஸ்தான் விமானம் ஒன்றும் வீழ்த்தபட்டது

அதில் ஒரு பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது

முதலில் பாகிஸ்தான் விமானம் விழுந்திருக்கின்றது, அதில் தப்பி குதித்த விமானி பாகிஸ்தானி என தெரியாமலே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள்

சம்பவம் அறிந்து பாகிஸ்தான் ராணுவம் ஓடிசென்று மீட்டபொழுதுதான் அபிநந்தனின் விமானமும் விழுந்து ஆவரும் அடிபட்டிருக்கின்றார்

அவரையும் பாக் ராணுவம் மீட்டிருக்கின்றது

நினைவிருகின்றதா? முதலில் இரு இந்திய விமானங்கள் என தகவல் வந்ததல்லவா? அந்த குழப்பம் இதுதான்

அதுவும் இந்திய விமானி ஒருவர் மருத்துவமனையில் இருக்கின்றார் என பாகிஸ்தான் குழப்பி அடித்த கதையும் இதுதான்

இதில் அடிபட்ட பாகிஸ்தான் விமானி மரணமடைந்துவிட்டார்

தாக்கியது பொதுமக்களா? பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளா? எனும் குழப்பம் நீடிக்கின்றது பொதுமக்கள் பெரும்பாலும் ஆபத்தில் இருப்பவனை அடிப்பதில்லை

நல்ல வேளையாக பாக் விமானி விழுந்தபின்பு அபிநந்தன் விழுந்திருக்கின்றார், அபிநந்தன் முந்தி விழுந்திருந்தால் நிலமை சுமூகமாக இருந்திருக்காது

ஆக பாக் விமானி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களாலேயே அடித்து கொல்லபட்டிருக்கின்றார்

ஒருவேளை பொதுமக்கள்தான் அடித்திருப்பார்களோ? நான் பாகிஸ்தான் விமானி என்றவுடன் வெறிகொண்டு அடித்து துவைத்திருப்பார்களோ?