பாசுமதி அரிசி விளைவிக்க தடை

Image may contain: foodபஞ்சாப் காஷ்மீர் போன்ற சில மாநிங்கள் தவிர வேறு மாநிலங்களில் பாசுமதி அரிசி விளைவிக்க தடை

மிளகு, சந்தணம் போன்ற இந்திய அடையாளங்களில் ஒன்று பாசுமதி அரிசி.

அது இமயமலை நீருக்கும் வட இந்திய மண்ணுக்கும் மட்டுமே நன்றாக விளையும் ரகம். கேரள மிளகு போல இமயமலை அடிவார, குறிப்பாக பஞ்சாப் பாசுமதிக்கு உலகெல்லாம் இன்றளவும் கடும் கிராக்கி.

இந்திய பாகிஸ்தானிய பாசுமதி அரிசிக்கு இருக்கும் கிராக்கி உலகில் எந்த நாட்டு அரிசிக்கும் இல்லை, தாய்லாந்து,வியட்நாம் பர்மா பாசுமதி எல்லாம் இவைகள் முன்னால் நிற்கமுடியாது

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் பாசுமதி அரிசி இந்தியா எங்கும் விளைவிக்கபடுகின்றது, அதில் பஞ்சாப் அரிசியினை தவிர மற்ற அரிசியில் குறிப்பிட்டதரம் இல்லை என்பதால் மேல்நாடுகள் வாங்க தயங்குகின்றன‌

அதற்காக குவியும் அரிசியினை ரேஷனில் பாஸ்மதி, சத்துணவில் பிரியாணி என கொடுக்கமுடியாதல்லவா? அதனால் மற்ற மாநிலங்கள் அதனை பயிரிட கூடாது என மத்திய அரசு சொல்கின்றதாம்

இது எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும், பிரச்சினை வெடித்தாலும் வெடிக்கலாம்

இதில் நம் தமிழக அழிச்சாட்டியங்கள் அற்புடமாக அட்டகாசம் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கின்றது

அதாவது பஞ்சாபிற்கு பாசுமதி என்றால் தமிழகத்திற்கு காவேரி கரையில் விளையும் பொன்னி, சீரக சம்பா போன்றவை மகா பிரசித்தி

பஞ்சாபிய பாசுமதி மற்ற மாநிலங்களில் விளைவிக்க கூடாது என்றால், எம் பொன்னி அரிசி மட்டும் கன்னடத்திலும் ஆந்திராவிலும் விளைய அனுமதிக்கலாமா? இது தமிழின துரோகம், ஆரிய சதி, மோடியின் இன ஒழிப்பு கொள்கை என இவர்கள் கிளம்ப வாய்ப்பிருக்கின்றது.

சந்தடி சாக்கில் இது கேரள மிளகு, அசாம் டீ என இன்னும் சில விவகாரங்களில் எதிரொலிக்கலாம்.