பாஜகவிற்கும் தமிழகத்திற்கும் என்ன பகை?

காங்கிரசுக்கும் தமிழகத்திற்கும் ஏகபட்ட சிக்கல் உண்டு, இந்தியில் தொடங்கி இந்திரா தாக்குதல் ராஜிவ் மரணம் என அவர்கள் ஒருமாதிரி நின்றால் குறைந்தபட்சம் சரி
ஆனால் இந்த பாஜகவிற்கும் தமிழகத்திற்கும் என்ன பகை? என்ன மோதல்? ஒன்றுமே இல்லை
நல்ல தேசிய கட்சி என்ன செய்ய வேண்டும்? இந்நேரம் பிரதமர் மோடி ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும் , ஒரு மத்திய அமைச்சரை அங்கு அனுப்பியிருக்க வேண்டும்
மாறாக நேரடியாக துணை ராணுவத்தை அனுப்புவோம் என்பது பாஜக அரசு கொண்டுள்ள வெறுப்பை காட்டுகின்றது
அப்படி தமிழகம் பாஜகவினருக்கு என்ன துரோகம் செய்தது? என்ன வெறுப்பினை கொடுத்தது? ஒன்றுமே இல்லை
பின் எதுதான் காரணம் என தேடினால், ஆர்.எஸ்,எஸ் கும்பலுக்கு தமிழகம் சிம்ம சொப்பனமாக நிற்பது ஒன்றே எனும் முடிவுக்குத்தான் வரமுடிகின்றது
காரணம் அதை தவிர பாஜகவிற்கும் தமிழகத்திற்கும் என்ன உரசல்?
பாஜக தமிழர்களை இந்தியர்கள் என கருதட்டும், தமிழ்மக்களின் வலி தன் வலி என கருதி ஓடிவந்து உதவட்டும், கட்சி தானாய் வளரும்
தமிழகம் என்பது தேசிய உணர்வு மனப்பான்மை கொண்ட மாநிலம், அதனால்தான் இங்கு வைகோ முதல் புலிகள் வரை அனாதை ஆனார்கள்
அதே நேரம் தமிழர் உணர்வும், வட இந்தியாவினை விட விழிப்புணர்வும் கொண்ட மாநிலம் என்பதால் திராவிட கட்சிகள் ஆட்சி புரிகின்றன
இந்த விழிப்புணர்வுதான் பாஜகவின் கவலை, வடமாநிலம் போல முட்டாள்களாக இருந்தால் அதற்கு சிக்கல் இல்லை
நல்ல பாஜக என்ன செய்ய வேண்டும்? தமிழக அளவிற்கு விழிக்க வேண்டாமா?
மாறாக நீ எப்படி சிந்திக்கலாம், வட இந்தியனை போல் முட்டாளாய் இரு இல்லை என்றால் சுடுவேன் என்றால் அது எப்படி நியாயமாகும்?
திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய இங்கு ஆயிரம் வழி உண்டு, தமிழக மக்கள் பக்கம் இருந்து அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள் கட்சி வளரும்
அதை விடுத்து, திராவிட கட்சி பின்னால் போகும் மக்களை அடிப்பேன், வதைப்பேன், துப்பாக்கி முனையில் பலாத்காரமாக திருப்புவேன் என்பதெல்லாம் இங்கு பாஜகமேல் வெறுப்பையே கொண்டுவரும்
பாஜக இந்த யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டும்
இது புரியாமல் பேசிகொண்டிருப்பதால்தான் அது தமிழிசை, எஸ்வி சேகர், ராசா போன்றவர்கள் காமெடியன் ஆகின்றார்கள்
இப்பொழுது கொலைகார கட்சி என்றும் பெயரெடுத்தாயிற்று
பின் எப்படி இங்கு காலூன்ற முடியும்?
தமிழருக்கு ஆதரவான காரியங்களை செய்தல்லவா இங்கு கட்சி நடத்த முடியும்? காவேரியிலாவது கன்னட வோட்டுவங்கி தடுத்தது, இந்த ஸ்டெர்லைட்டுக்கு என்ன வந்தது?
தமிழகதிற்குரிய நிலையில் பாஜக அரசியல் செய்தால் நிலைக்கும், இல்லை என்றால் அழியும்
காமராஜர் எனும் மாமனிதன் தமிழக மக்களின் சில உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருந்ததே காங்கிரஸ் இங்கு அழிய தொடங்கியதன் தொடக்கம்
தொடர்ந்து சில இடங்களில் தமிழரை வெறுப்பேறியதே காங்கிரஸ் இங்கு வீழ காரணம்
ஆண்ட கட்சியான ஆலமரமாக இருந்த காங்கிரஸே இங்கு அப்படி ஆனதென்றால், இன்னும் முளைக்காத பாஜக எப்படி வளரும்?
பாஜக தமிழக உணர்வுகளை புரிந்து நடந்தால் அதற்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது
தமிழகத்தால் பல கசப்பான அனுபவங்களை பெற்ற காங்கிரசின் ராகுல் தமிழக மக்களுக்கு ஆதரவாக இருப்பதும், பாஜகவிற்கும் தமிழகத்திற்கும் எந்த விரோதமும் இல்லா நிலையிலும் பாஜக தமிழரை எதிர்த்து நிற்பதும் அரசியல் வினோதங்கள்