பாஜகவிலும் ஒரு சசிகலா குடும்பம் இருக்கின்றது
அமித் ஷா மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை: ராஜ்நாத் சிங்
ஆமாம், ப.சிதம்பரம் மகன் மீதான குற்றசாட்டு என்றால் அலறி அடித்துகொண்டு விசாரிக்கவேண்டும் . பிரியங்காவின் கணவன் என்றால் உடனே வழக்கு பதிய வேண்டும்
ஆனால் அமித்ஷா மகன் என்றால் விசாரணை இல்லையாம்
அமித்ஷா குடும்பம் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டது என இவரே சொல்லிகொள்கின்றார்.
அதனை விசாரணை நடத்தி நீதிமன்றம் சொன்னால் என்ன?
(மோடியினை காட்டி பல்லாயிரம் கோடி ஆட்டையினை போட்ட தகப்பனும் மகனும் இவர்கள்தான்
பாஜகவிலும் ஒரு சசிகலா குடும்பம் இருக்கின்றது )
பேசக்கூடிய பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்
பேசாமல் ஒழுங்காக கடமையாற்றிய அந்த பிரதமர் நாட்டை வளர்த்ததற்கும், பேசி பேசியே நாட்டின் பொருளாதரத்தை நான் கெடுத்துவிட்டேன் என மோடி ஒப்புகொண்டதற்கும் வித்தியாசம் இல்லையா?
மோடி பேசிய அதிகபடியான வார்த்தை புதிய இந்தியா பிறக்கின்றது என்பதுதான், இப்பொழுது மோடியினை அப்படி பேசசொல்லுங்கள் பார்க்கலாம்
அது சரி மிஸ்டர் அமித்ஷா, அந்த பேசகூடிய பிரதமரை அழைத்துகொண்டு கேரளா பக்கமோ, தமிழ்நாடு பக்கமோ வந்து சென்றால்தான் என்ன?
மோடி அதிகம் பேசுவது இருக்கட்டும், மோடியினை காட்டி அமித்ஷா குடும்பம் பல்லாயிரகணக்கான கோடிகளை சுருட்டிவிட்டது எனும் செய்திகள் வரும் செய்திபற்றி மட்டும் அமித்ஷா பேசமாட்டார்
அமித்ஷா மகனின் திடீர் சொத்து அவரின் தனிபட்ட சம்பாத்யம், கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை என தமிழிசை சொல்வார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்
எங்கள் கனவில் மண் அள்ளிபோட்டுவிடாதே தாயீ.. பிளீஸ்
தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் : பொன்னார்
மிஸ்டர் பொன்னார், இங்கு தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது பாஜக ஆட்சிதான். அது கூட தெரியாமல் என்னமோ பேசிகொண்டிருக்கின்றீர் அய்யா..
இந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்களே ஒரு மாதிரிதான் போல
பொன்னார், தமிழிசை, நாஞ்சில் சம்பத் என அங்கிருந்துதான் வருகின்றார்கள்