பாஜக கட்சியினரிடையே கடும் போட்டி

பாஜக கட்சி பெரும் பைத்தியகார கட்சி என பெயர் வாங்கி தருவதில் அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிகழ்கின்றது

தமிழகத்தில் சிலர் அக்கடமையினை கண்ணும் கருத்துமாக செய்து முண்ணணியில் இருந்தாலும் வடக்கே இன்னும் பலர் அடிக்கும் சிக்ஸர்களில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை

வடக்கே பாஜக கட்சியினை பெரும் கிறுக்கர்கள் , காமெடியர்கள் நிறைந்த கட்சி என்ற பெயர் வாங்கி கொடுக்க திரிபுரா முதல்வர், அமைச்சர் மகேஷ் சர்மா என பலர் அயராது உழைக்கின்றனர் எனினும் இப்போதைய வரவு பாஜக மராட்டிய எம்.எல்.ஏ ராம் கதம் என்பவர்

அன்னார் என்ன செய்திருக்கின்றார்? கோகுலாஷ்டமி உறியடி திருவிழாவில் கலந்து கொண்டு உறியடித்து உற்சாகமாகிவிட்டார்

அத்தோடு வெண்ணைய் தின்று கிளம்பி இருக்கலாம், ஆனால் வெண்ணெய் தனமாக பேசிவிட்டார்

கண்ணனின் பெருமைகளை சொல்லிகொண்டே இருந்த அவர், திடீரென “கண்ணன் காதலித்தான் திருமணம் செய்தான், அர்ஜூனன் காதலுக்கெல்லாம் உதவினான்

நாமும் காதலை வாழவைக்க வேண்டும், நான் கண்ணனின் பக்தன் என்பதால் சொல்கின்றேன் ஏ வாலிபர்களே நீங்கள் யாரை காதலித்தாலும் சரி என்னிடம் சொல்லுங்கள் நான் தூக்கி வந்து கட்டி வைக்கின்றேன், இதுவே கண்ணன் காட்டிய வழி இனி இந்த அண்ணன் காட்டபோகும் வழி” என சொல்லிவிட்டார்

இதை கேட்டுகொண்டிருந்த பெண்கள் மனதும் அவர்களை பெற்றவர் மனதும் என்ன பாடு பட்டிருக்கும்? அவர்கள் உறியடித்தற்கு பதில் இவரை அடித்திருக்க வேண்டும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

இப்பொழுது பாஜக எம்.எல்.ஏ கதம் வீட்டின் முன்னால் பெரும் வாலிப கூட்டம் மனுவோடு நிற்பதாக செய்திகள்

பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சால் பெரும் சிரிப்பும் காமெடியும் நாடெங்கும் பரவுகின்றது

இது இன்னும் இந்த Babu Rao , Chandran Kannan கோஷ்டிக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியாது, தெரிந்தால் உடனே மனுவோடு அந்த பாஜக எம்.எல்.ஏவினை பார்க்க கிளம்பிவிடுவார்கள்

இதனால் நயன் தாரா என்பவர் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது நல்லது