பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆள்கின்றது : ராகுல் காட்டம்

Image may contain: 4 peopleபாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆள்கின்றது : ராகுல் காட்டம்

மிஸ்டர் ராகுல், அன்று உங்கள் பாட்டி ராமசந்திரன் வழியாக ஆளாத ஆட்சியா? உங்கள் தந்தை ஜெயா மூலம் ஆள நினைக்காத காட்சியா?

இதற்குத்தான் உங்களை எல்லோரும் அடிக்கடி தாக்குகின்றார்கள், பின் விளைவுகள் தெரியாமல் பேசிவிடுகின்றீர், அப்படி தெரியவில்லை என்றால் அருகில் இருக்கு திருநாவுக்கரசரை கேளுங்கள், அவர்தான் பெரும் வாழும் சாட்சி

ராகுலை அல்ல, அவருக்கு பேச எவனோ தமிழக காங்கிரசில் எழுதி கொடுத்திருக்கின்றான் அல்லவா? அவனை சாத்த வேண்டும், இப்படி அபத்தங்களை வைத்து அக்கட்சி என்ன கிழிக்குமோ தெரியாது

அப்படி ராகுலுக்கு எழுதி கொடுத்த காங்கிரஸ்காரனுக்கு என்ன கோபம்??

இந்த மோடிக்கு பழனிச்சாமி எப்படி எல்லாம் முதுகினை மிதிக்க கொடுக்கின்றார், இவ்வளவிற்கும் கூட்டணி கூட இல்லை, ஆனால் இந்த வானதி, தமிழிசை எல்லாம் கூட தமிழக முதல்வர் அளவிற்கு பேசுகின்றார்கள்

ஆனால் நாம் டெல்லியில் ஆளும்கட்சியாக இருக்கும்பொழுது தமிழகத்தில் கலைஞர் இருக்கும்பொழுது ஏதும் இப்படி அதிகாரம் செலுத்த முடிந்ததா? 4 வார்த்தை பேசமுடிந்ததா? இல்லை

எப்படி கலைஞர் நம்மை ஆதரித்துகொண்டே கட்டி போட்டிருந்தார், சே.. இது பழனிச்சாமி அல்லவா மனிதர்

இந்த கோபத்தில்தான் இப்படி ராகுலுக்கு எழுதி கொடுத்திருக்கின்றார்கள், அது தமிழிசையினை பார்த்து வந்த கோபமாக கூட இருக்கலாம்

ஏதும் குமரி அனந்தனின் ஸ்லீப்பர் செல், அல்லது திருநாவுக்கரசர் தவிர யாரும் இப்படி அபத்தமாக ராகுலுக்கு எழுதிகொடுக்கமாட்டார்கள்,

சொல்லமுடியாது திமுகவினர் காங்கிரஸார் வேடத்தில் சென்று எழுதியிருக்கலாம், தமிழக காங்கிரஸில் கோஷ்டிக்கா பஞ்சம்?

காங்கிரஸ் புறவாசல் வழியாக தமிழகத்தை ஆளாததையா, பாஜக ஆண்டுவிட்டது?