பாஜக முயற்சிகின்றது, ஏதாவது செய்யவேண்டும் என துடிக்கின்றது

சரியோ தவறோ, தமிழகத்தில் கட்சியினை வளர்க்க மிகவும் தீவிரமாக களமிறங்கிவிட்டது பாஜக. மக்கள் நாடி துடிப்பினை பார்க்க சில கற்களை எச்.ராசா, சேகர் என எறிந்து பார்க்கின்றது

காவேரி, ஆளுநர் சர்ச்சை என சில விஷயங்களில் இருந்து மக்கள் கவனத்தை திருப்புவது ஒருபுறம் இருந்தாலும் , இப்படி எல்லாம் பேசினால் எதிர்ப்பு எப்படி வருகின்றது? யாரெல்லாம் எதிர்க்கின்றார்கள்? என குறிப்பும் எடுக்கின்றார்கள்

ஒவ்வொரு சர்ச்சைக்கு பின்னும் தங்களை தீவிரமாக எதிர்ப்பது யார்? அவர்களை எப்படி சரிகட்ட வேண்டும் எனும் அறிக்கையும் தயாரிக்கபடலாம்

இங்கொன்றும் காரியம் இல்லாமல் காய்களோ வாய்களோ நகர்த்துதல் இல்லை , சில விஷயங்கள் எஸ்வி சேகரின் பத்திரிகையாளர் பதிவு போல பின் விளைவுகளை கொடுக்கின்றதே தவிர, பல விஷயங்கள் திட்டமிட்டவை

அமைதியாக இருக்கும் தமிழக குளத்தை ஆளவருகின்றது பாஜக, அதற்கு முன் அங்கிருக்கும் முதலைகள், நீர்யானைகள், ஆமைகள் கணக்கு எல்லாம் அதற்கு வேண்டும்

அதற்கு குட்டையினை குளப்ப வேண்டும், கல்லெறிந்த உடன் முதலையும், நீர்யானையும் சீறுகின்றன. ஓஓ இதெல்லாம் இருக்கின்றதா என கணக்கெடுகின்றார்கள்.

இந்த முதலைகளுக்கு உணவளிப்பது யார் என்பது வரை குறிக்கபடுகின்றது

அதனை அட்டகாசமாக செய்கின்றாகள், அவர்களின் முயற்சிகள் எல்லாம் இன்று அவர்களை நகைப்புகுரிய விஷயமாக நோக்க வைத்தாலும், பின்னால் இருக்கும் திட்டங்களை அறிந்து கொள்ள இன்னும் சில ஆண்டுகள் பொறுக்க வேண்டும்

இப்படி எல்லாம் உளராதே, அதிக கற்பனை செய்யாதே என நீங்கள் சொல்லலாம், ஆனால் பின்னொரு நாளில் நீங்களே உணர்வீர்கள்

அது இருக்கட்டும்

இந்த பாஜகவாவது இவ்வளவாவது முயற்சிகின்றது, ஏதாவது செய்யவேண்டும் என அது துடிக்கின்றது

ஆனால் இந்த காங்கிரஸ் என்றொரு தேசிய கட்சி இருக்கின்றதே, அதற்கு இங்கு வளரவேண்டும் என்றோ இங்கு ஆட்சியினை பிடிக்கவேண்டும் என்றோ கொஞ்சமும் சிந்தனயே இல்லை

நிச்சயம் அது யானை, தாமாகாவிற்கு கிடைத்த வரவேற்பல்லாம் காங்கிரஸ் செத்துவிடவில்லை என்பதை காட்டிற்று

ஆனால் அந்த யானை நிலை என்னாயிற்று என்றால், திமுகவோ அதிமுகவோ ஏதாவது பாகன் பின்னால் போகலாம், பழமோ சோற்று உருண்டையோ கிடைக்கும் போதும் என்ற நிலைக்கு வந்தாயிற்று

சர்ச்சைகுரியவர்கள் என்றாலும் பாஜகவினர் போராட தொடங்கிவிட்டனர், இந்த ஆண்ட வம்சமான காங்கிரஸ் இன்னும் உறக்கத்திலே இருக்கின்றது

இப்போதைக்கு படுமோசமான செயல்பாடு உள்ள கட்சி இங்கு அதுதான்