பாட்ஷா முதல் தனுஷ் வரை….

22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலுக்கு மாற்றபட்டு வெளியான பாட்ஷா படத்துக்கு பெரும் வரவேற்பு, பெரும் வசூலுடன் சில தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடுகின்றது : செய்தி

இது என்ன வரவேற்பு?

அண்ணாமலை படத்தினை ரீமேக் செய்தால் குஷ்பூவிற்காக‌ தமிழகம் முழுக்க பல‌ மாதம் ஹவுஸ்புல்லாக ஓடும்,

அவருக்கு இருக்கும் மக்கள் அபிமானம் அப்படி


திராவிட மாயையில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் :- கிருஷ்ணசாமி.

ஆமாம், இவர் சினிவாச ராமானுஜம் போல ஆங்கிலேயனை தன் அறிவால் வியக்கவைத்து அமெரிக்காவில் அக்காலமே மருத்துவம் படித்தவர் அல்லவா? அப்படித்தான் பேசுவார்.

திராவிட குரல் எழும்பவில்லை என்றால் இவரின் மருத்துவர் பட்டம் இவருக்கேது?, இந்நேரம் இவர் மருத்துவமனை காவலாளியாக கூட இருந்திருக்க முடியாது

இவருக்கு மருத்துபட்டமமும் கையில் ஸ்டெதெஸ்கோப்பும் போதா குறைக்கு கட்சி தொடங்க ஒரு தைரியமும் கொடுத்த திராவிடம் இவரை பொறுத்தவரைக்கும் மாயையாம்

ஒரு தலித் தலைவராக இவர் குரல் எழுப்ப , அந்த உரிமையினை கொடுத்ததே இந்த திராவிடம்தான்..

கோடாரி காம்பாக மாறியிருக்கின்றார் கிருஷ்ணசாமி,

நன்றி கொன்றது என்பது நிச்சயம் இதுதான்..


 ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கை: தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல்

இத்தனை நாள் கழித்து இந்த அறிக்கையினை தமிழக அரசிடம் கொடுக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு களபேரங்கள் நடந்தபொழுது கொடுக்காமல், அப்பல்லோ விளக்க அறிக்கை கூட்டம் நடக்கும்பொழுதும் கொடுக்காமல், இப்பொழுது ரகசியமாக வந்து கொடுக்க என்ன அவசியம்?

அப்பல்லோ கூட ஒரு விளக்கம் அளித்துவிட்ட பின்பு, இந்த எய்ம்ஸ் அறிக்கை மக்களுக்கு படிக்கபடாமல் ரகசியமாக ஏன் கொடுக்கபட வெண்டும்?

ஒரு மாநில முதல்வரின் சிகிச்சை அறிக்கையினை மத்திய அரசின் டாக்டர்கள் குழு ரகசியமாக , அதுவும் சர்ச்சைகுரிய மாநில அரசிடமே சமர்ப்பிக்கின்றது என்றால் என்ன சொல்வது?

மத்திய அரசை விட மாநில அரசும், மாநில அரசை விட மத்திய அரசும் மகா கள்ளத்தனமாக இருந்தால் இப்படித்தான் நடக்கும்

இந்த நாட்டில் ஒரு நல்லவன் கூட அந்த அதிகார மட்டத்தில் இல்லையா?


 தயவுசெய்து நிம்மதியாக எங்களை வாழ‌ விடுங்கள்: தனுஷின் சகோதரி உருக்கமான கோரிக்கை!

இதனைத்தான் இயக்குநர் விஜய், சுசித்திராவின் கணவர் இன்னும் பலர் உருக்கமாக கேட்டுகொண்டே இருந்தனர், யார் கேட்டார்கள்?

அவர்களை விடுங்கள்

செல்வராகவனின் படங்களை கண்ட தமிழகம் இப்படித்தான் கதறியது, கொஞ்சமாவது மனிதர் கேட்டாரா?