பாபா குகை முன்பு ரஜினிகாந்த்…

Image may contain: 1 person, standing

ரஜினிக்கு இருப்பது இரண்டே வழி ஒன்று விவேகானந்தரின் , ரமண மகரிஷியின் வழியில் ஆன்மீகவாதியாவது அல்லது அரசியல்வாதி ஆவது

இதனை தாண்டி இரண்டும் கலந்து ஆன்மீக அரசியல்வாதி ஆவேன் என்பதெல்லாம் குழப்பம் ஏற்படுத்தும் கதை

நல்ல ஆன்மீகவாதி அரசியலுக்கு வருவதில்லை, அரசியல்வாதி மனசாட்சிபடி நடந்தால் அவனால் ஆன்மீகத்திற்கு செல்லமுடியாது

காரணம் இந்த உலகில் நல்லாட்சி கொடுத்தவன் எல்லாம் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவே இருந்திருக்கின்றார்கள், வரலாறை புரட்டினால் அறியலாம்.

காரணம் அரசு என்பது அறம், மனசாட்சி, 100% நியாயம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது

நல்ல அவதாரம் எதுவும் அரசுக்கு ஆசைபட்டதுமில்லை. அப்படி ஆசைபட்டால் அவர்கள் ஆன்மீக‌ துறவிகளும் அல்ல.

இதனால் மிக உறுதியாக சொல்லலாம், இரண்டில் ஒருவழியினை அவர் முழுக்க தேர்ந்தெடுத்தால் நல்லது. இரண்டையும் கலந்தால் அவர் நிஜத்திலும் நடிக்க வந்துவிட்டார் என்பதை தவிர ஒரு முடிவுக்கும் வரமுடியாது