பாபிலோனா பாட்டி மனு , நாசர் வேதனை இன்னும் பிற…
நடிகை பாபிலோனா மந்திரவாதியிடம் சிக்கியிருக்கின்றார், அவரை மீட்க வேண்டும் : போலீஸ் கமிஷனரிடம் பாட்டி மனு
அதே நேரம் பாபிலோனா என் கணவர் மந்திரவாதி அல்ல என பதில் அறிக்கை கொடுத்திருக்கின்றார்
ஆக எவனோ ஒரு மந்திரவாதி பாபிலோனாவுக்கு அனுப்பிய ஆவி, வேறு ஏதோ பெண்ணை கடத்தியிருக்கின்றது.
ஆவி சென்ற நேரம் பாபிலோனா மேக்கப் இல்லாமல் இருந்திருக்கலாம், அதனால் ஆவி குழம்பி திரும்பி வேறு எங்கோ கடத்த சென்றிருக்கலாம்.
400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன: நாசர் வேதனை
எத்தனை விவசாயி பயிரை காப்பாற்ற நீரின்றி முடங்கி கிடக்கின்றான்,
அதனை மீறி விளைவித்ததை இந்த கரன்சி பிரச்சினையால் விலையாக்க முடியாமல் தவிக்கின்றான்
எத்தனை நூறு ஏடிஎம் மெஷின்கள் முடங்கி இருக்கின்றன
அப்பல்லோ நிகழ்வுகளால் தமிழக அரசே முடங்கி கிடக்கின்றது
இதில் இவருக்கு 400 படம் முடங்கியதால் பெரும் வேதனையாம்.
கொசுறு
கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில்
தமிழக மீனவர்களுக்கு அனுமதி வேண்டும்! வைகோ
இவர் பேசிய பிரச்சினை எதாவது தீர்ந்திருக்கின்றதா?
இனி அனுமதி எப்படி கிடைக்கும்? வாயினை திறந்துவிட்டார் அல்லவா?