பாம்பு கொத்தும் முன் அதை கொல்வதுதான் நல்லது

நாட்டுக்குள் கோஷ்டி கோஷ்டியாக அரசியல்வாதிகள் கத்திகொண்டிருந்தாலும் , ஆளாளாளுக்கு ஆயிரம் கனவுகளில் இருந்தாலும் காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌

அந்த காஜாமைதீன் கோஷ்டி மிக வலுவான வலயமைப்பும் கொண்டதும், பெரும் தாக்குதலை நடத்தும் வல்லமை மிக்கதுமாய் இருப்பது தெரியவந்திருக்கின்றது

முன்பே தெரிந்து ஆங்காங்கே கைதுகள் நடந்தாலும் அவர்களின் ஆழத்தையும் பலத்தையும் தொடர்பையும் கண்ட காவல் அமைப்புகள் அதிர்ந்திருக்கின்றன‌

மிகபெரும் தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்

அவர்களின் பெரும்பாலானோர் தமிழகத்தில் கைது செய்யபடுவதும், காவலர் கொலை இங்கு நடந்திருப்பதே இப்போதைய தமிழக கடும் பதற்றத்துக்கு காரணம்

தமிழகம் 1970 வரை மிக அமைதியான பகுதி, மகாத்மா காந்தி முதல் நேரு வரை காலாற நடந்து வந்து, தமிழர் வீட்டு திண்ணையில் அமர்ந்து தண்ணீர்வாங்கி குடித்த அமைதியான பூங்கா

இங்கு திமுக ஆட்சி வந்ததில் இருந்து ஒரு வெறித்தனமும் காட்டுமிராண்டிதனமும் குடியேறின, அது இந்திராவினை கொல்லபார்த்தது, அதன் பின்பு வெடிகுண்டுகள் வெடிக்க தொடங்கின அது ராஜிவினையும் கொன்றது

பின் கோவையில் காவலரை கொன்று கலவரமாக்கி வெடிகுண்டாய் வெடித்தது

ஒரு விஷயம் எம்மால் உறுதியாக சொல்லமுடியும், அதிமுக ஆட்சியில் பொதுவாக இம்மாதிரி கலவரங்கள் நடக்காது, பெரும் சர்ச்சைகள் இருக்காது

திமுக அரசு சிறுபான்மையினரை தடவி கொடுத்து டெல்லிக்கு எதிராக கொம்பு சீவும் அரசியல் கொண்டது, சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் அதையே செய்தது

இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் பழனிச்சாமி மாநில பாதுகாவலில் மகா அஜாக்கிரதையாக இருந்திருப்பாரோ என எண்ணவைக்கும் காட்சிகள் நடக்கின்றன‌

தூத்துகுடியில் அப்பாவிகள் 13 பேரை சுடதெரிந்த பழனிச்சாமி அரசுக்கு, தேசவிரோத சக்திகள் சிலவற்றை ஓடவிட்டு சுட ஏன் தெரியவில்லை எனபதுதான் மில்லியன் டாலர் கேள்வி

மிகபெரும் சவாலும் மிரட்டலும் பழனிச்சாமி அரசு முன்னால் இருக்கின்றது, காவல்துறைக்கும் பழனிச்சாமியே பொறுப்பு

இவ்வளவு பெரும் மிரட்டலும் பரபரப்பு செய்திகளும் வரும் நிலையிலும் மாநில அரசு பொறுப்பான பதிலும் நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை

பாம்பு கொத்தும் முன் அதை கொல்வதுதான் நல்லது, பாம்பு கொத்திவிட்டபின் பாம்பை கொன்று ஒரு பலனுமில்லை…