பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி

என்னதான் சர்ச்சை என்றாலும் வாழ்த்தவேண்டிய இடங்களில் வாழ்த்தவேண்டும்

பாரதி இத்தேசத்தையும் அதன் விடுதலையினையும் அதன் எதிர்காலத்தையும் பாடி பாடி செத்த கவிஞன்

அவனுக்கு இதுகாலம் வரை இத்தேசத்தில் பெரும் அடையாளமில்லை, அதுவும் காங்கிரஸ் பிரதமர்கள் பெரும்பாலும் அவனை கண்டுகொண்டதே இல்லை

முதன் முதலாக அந்த சிங்க தமிழனின் வரிகளை பாரத பிரதமர் செங்கோட்டையில் முழங்குகின்றார், அந்த நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அய்யா மோடி

எம் பாரதியின் அருமையினை நீர் உணர்ந்து கொண்டதற்காக தமிழர்களின் நன்றிகள்

அப்படியே அவனின் எல்லா பாடல்களையும் பாருங்கள், அதில் “வந்தே மாதரம் என்போம்” எனும் பாடலும் “தாயின் மணிக்கொடி பாரீர்” எனும் பாடலும் இருக்கும்

தேசபக்திக்கு அதைவிட சிறந்தபாடல் எங்கு உண்டு?

அதனால் அதில் ஒன்றை தேசிய கீதமாக அறிவித்து அந்த தேசகவிஞனுக்குரிய கவுரவத்தை கொடுங்கள்