பாரத பிரதமரை வரவேற்கின்றோம்

Image may contain: text

இன்றைய இந்தியாவில் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அதன் ராணுவபலம் குறைந்ததல்ல, முதல் இடங்களுக்குள் அட்டகாசமாக வருமளவு பலம் கொண்டது இந்திய ராணுவம்

ஆனால் அதன் சொந்த ஆயுத தயாரிப்பு என்பது பற்றி உலகநாடுகளிடம் அபிமானம் கிடையாது, 1962க்கு பின் இந்தியா கடும் வேகத்தில் தன் ராணுவத்தை மாற்றியது

ஆவடி தொழிற்சாலை, கோவா கொச்சின் கப்பல் கட்டும் தளம், திருச்சி தொழிற்சாலை , பெங்களூர் எச்.ஏ.எல் என பல விஷயங்களை செய்து அதுவும் சொந்த உற்பத்தியினை தொடங்கியது

சில தொழில்நுட்ப விஷயங்களை வாங்குவோமே அன்றி எங்களிடமும் ஆயுத உற்பத்தி உண்டு என சொல்ல இந்தியா இதுவரை இல்லா மிகபெரும் கண்காட்சியினை சென்னையில் நடத்துகின்றது

இதில் பல நாடுகளில் இருந்தும் அவர்களும் தங்கள் தயாரிப்பை காட்ட காட்சி சாலை அமைக்கின்றார்கள்

நிச்சயம் இது பெரும் விஷயம், வரவேற்க வேண்டிய விஷயம்

உலக நாடுகளின் ராணுவ தளவாடங்கள் பங்குபெறும் கண்காட்சியினை நடத்தி இந்தியாவும் தன் தயாரிப்புகளை வைக்கின்றது

அர்ஜூன் டாங்கிகள், தேஜஸ் விமானம், அக்னி ஏவுகனை, காளி சிஸ்டம் என நம்மிடமும் சில விஷயங்கள் உண்டு அவைகளும் வைக்கபடுகின்றன‌

பலநாட்டு விற்பனர்களும் வருவதால் முதல் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை 4ம் நாள் அனுமதி உண்டு

இந்த மாபெரும் கண்காட்சியினை , உலக அரங்கில் இந்தியாவும் தலைநிமிர்ந்து நிற்கும் அந்த கண்காட்சியினை திறக்கத்தான் மோடி சென்னை வருகின்றார்

உலகமே உற்றுநோக்கும் இந்நிகழ்வில் திமுக கருப்புகொடி காட்டுவது என்பது நிச்சயம் சரியாகாது, அது திமுகவின் இந்திய எதிர்ப்பினையே காட்டும்

உலகநாடுகள் காவேரி என்பதை எல்லாம் கண்டுகொள்ளாது மாறாக திமுக எனும் கட்சி இந்தியாவின் ஒருமைபாட்டை விரும்பாத , அதன் ராணுவபலத்தை விரும்பாத ஒருவித இந்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட கட்சி என்றே குறிக்கும்

மோடியினை எதிர்க்க ஆயிரம் வழிகள் உண்டு, ஏன் அவரை கோபால புரத்தில் அழைத்து கூட எதிர்க்கலாம்

தமிழிசையினை பிணை கைதியாக்கி கூட எதிர்க்கலாம்

ஆனால் நாட்டின் பாதுகாப்பின் முக்கிய அம்சமானம், ராணுவ வளர்ச்சியின் மைல்கல்லான இந்த கண்காட்சியினை திறக்கவரும் பிரதமருக்கு திமுக கருப்புகொடி காட்டும் என்றால் அது நிச்சயம் சரி அல்ல‌

இது இந்தியாவின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மாண்பு சம்பந்தபட்ட விஷயம் என்பதால் கருப்புகொடியினை இப்போதைக்கு மடக்கி வைத்துவிட்டு இன்னொரு நாள் விரிப்பது நல்லது

இங்கு சர்ச்சைகள் எந்நாளும் இருக்கும், போராட ஆயிரம் காரணம் தினமும் இருக்கும். அதனையே செய்துகொண்டிருந்தால் தேசத்திற்கான கடமைகளை செய்ய முடியாது

இந்த கண்காட்சிக்கு ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதால் இதனை தொடக்கி வைக்கவரும் பாரத பிரதமருக்கு பெரும் ஒத்துழைப்பும் வரவேற்பும் கொடுக்க வேண்டியது நம் கடமை

கட்டபொம்மனும், பூலித்தேவனும், மாவீரன் மருதநாயகமும், வீரமங்கை வேலுநாச்சியாரும், மருதுபாண்டியரும் பெரும் ராணுவம் கட்டி எழுப்பிய மண் இது

அந்த இந்திய மண்ணில் மாபெரும் ராணுவ கண்காட்சி நடப்பதை இந்திய தமிழர்கள் மிக பெருமையாக உணரவேண்டுமே அன்றி, இந்த அரசியல்வாதிகள் சொற்கேட்டு கருப்பு கொடி எல்லாம் தூக்குதல் கூடாது

இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயரும் இத்தருணத்தில் இந்தியனாய் பெருமிதம் கொண்டு அக்கண்காட்சியினை தொடக்கி வைக்க வரும் பாரத பிரதமரை வரவேற்கின்றோம்

ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்