பார்சிக்கள்…
அய்யா, ரத்தன் டாட்டா எவ்வளவோ சமூகபணிகளை செய்கின்றார், நாட்டுபற்றுடனும் அவர்கள் குழுமம் விளங்குகின்ற்து, அதைபற்றி நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என கேட்டார் அன்பர் ஒருவர்
அன்பரே டாட்டாக்களின் தேசபற்றை புரிந்துகொள்ளுமுன் அவர்கள் இனமான பார்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்
பார்சிக்கள் தனித்துவமான மதமும் கலாச்சாரமும் கொண்டவர்கள், அவர்களின் பூர்வீகம் பெர்ஷியா எனும் ஈரான் அந்த பூமி அராபிய எழுச்சியில் முழுவதும் மாறியபொழுது பார்சிகள் தங்களை காத்து கொள்ள இந்துக்களிடம் அடைக்கலாகி இந்துஸ்தானத்தில் வசிக்க ஆரம்பித்தார்கள்
அவர்கள் அன்று கிறிஸ்தவ நாடுகளுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லமுடியாது சென்றால் மதம் மாற வேண்டும், அடையாளத்தை இழக்க வேண்டும் அதனால் இந்துக்கள் வாழும் இந்தியா அவர்களுக்கு ஒரே தேர்வாக இருந்தது
யாரையும் கட்டாய மதமாற்றம் செய்யாததும், உன் மதம் பாவ மதம் என் மதம் சிறந்தது என வாதிடாமல் அவர்களை சகோதரர்களாக அணைக்கும் இந்துமதம் பார்சிக்களை இங்கு வாழவைத்தது
அந்த நன்றி ஒவ்வொரு பார்சிக்களிடமும் உண்டு, பார்சிக்கள் மிகசிறிய இனமாயினும் யூதர்களை போல அறிவும் செல்வமும் கொண்டவர்கள் , ஒருவகையில் நெருப்பை வணங்கும் அவர்கள் அடிப்படை இந்து சாயலை கொண்டவர்கள்
அந்த இனம் இந்த நாட்டையும் இந்துக்களையும் நன்றியோடு வணங்கிற்று, அந்த பார்சிகளின் நன்றி ஒவ்வொரு இந்திய பார்சியிடமும் கலந்துவெளிபட்டது
டாட்டா அப்படித்தான் விசுவாசமிக்க இந்திய தொழிலதிபராக இருந்தார்
மானெக்சா அப்படித்தான் 1971 போரில் மாபெரும் வெற்றியினை பெற்று கொடுத்தார் அவர் ஒரு பார்சி
விஞ்ஞானி சாராபாய் விக்ரம் பெரும் திட்டங்களை முன்னெடுத்து இன்றைய வானியல் வளர்ச்சிக்கு அடிகோலினார் அவர் ஒரு பார்சி
என்றும் பார்சிக்கள் இந்தியாவுக்கு காட்டும் விசுவாசம் அப்படி, அந்த விசுவாசமும் நன்றியும் ஒரு காலத்தில் இந்துமதம் அவர்களுக்கு கொடுத்த அடைக்கலத்தினாலும் ஆறுதலினாலும் வந்தது
இந்துக்களின் பெரும் ஞானபெருந்தன்மையே பார்சிக்கள் இப்படி நாட்டுபற்றுடன் இருக்க காரணம்
இந்தியவாழ் யூதர்களிடமும் அப்படிபட்ட நன்றி உண்டு, ஐரோப்பா அரேபியா என வாழமுடியா அவ்வினம் இந்தியாவிலும் அடைக்கலாகி இருந்தது
அவர்கள் நிம்மதியாக இருந்த நாடு இந்தியா என்பது அவர்கள் வரலாற்றிலே காணபடும் குறிப்பு, வெறுப்பும் கசப்பும் இல்லாமல் மதமாற்ற இம்சை இல்லாமல் என் மதமே பெரியது உயர்ந்தது எனும் மேட்டிமை இல்லாமல் அவர்களையும் இங்கு வாழவைத்தது
அமெரிக்கா கண்டறியும் வரை இந்தியாவும் இந்து அரசர்களும் இந்துக்களுமே பார்சிக்கள் யூதர்கள் போன்றோருக்கு ஆறுதலும் அடைக்கலமுமாக இருந்தார்கள்
இந்தியாவில் வாழும் பார்சிக்களை போல யூதர்களும் இந்நாட்டுக்கு விசுவாசமாக இருந்தார்கள், வங்கபோரில் கடைசி நேர மாபெரும் சாகசம் காட்டி பாகிஸ்தானை பணியவைத்த கேப்டன் ஜேக்கப் அப்படி ஒரு இந்திய யூதரே
எங்கிருந்தோ வந்த பார்சிகளுக்கும், யூதர்களுக்கும் இந்தியாவின் அருமையும் இந்துமதத்தின் பெருமையும் , அதன் அவசியமும் முழுக்க புரிந்திருக்கின்றது அந்த நன்றியில் இன்றுவரை இந்தியாவுக்கு சேவை செய்கின்றார்கள், இந்தியாவினை காக்கின்றார்கள்
ஆனால் அந்த நன்றியில் கொஞ்சம் கூட காலம் காலமாக இங்கு இந்தியர்களாக வாழும் தமிழகத்தின் பலருக்கு இல்லை அப்படி ஒரு அறியாமையிலும் வரலாற்று புரட்டிலும் ஏமாந்துவிட்டார்கள் என்பதுதான் சோகம்
யூதர்கள் சட்டபடி அவர்கள் கடவுளை தவிர யாருக்கும் தலைவணங்கமாட்டார்கள், ஆனால் அந்த யூத இந்தியன் ஜேக்கப் ஒரு இந்திய ராணுவ வீரனாக தேசியகொடிக்கு தன் 92ம் வயதிலும் சல்யூட் அடித்தார்
ஆனால் தமிழக குபீர் கிறிஸ்தவ ஆசிரியை என்ன பிதற்றினார் என்றால் அதுதான் அறியாமை, அதுதான் பரிதாபம்
ஆம் பார்சிகளுக்கும் யூதர்களுக்கும் தெரிந்த அளவு இந்துமத பெருமை இந்தியாவின் அருமை தமிழகத்தில் பலருக்கு தெரிவதில்லை அது அவர்களின் அறியாமை, அந்த அறியாமை நீங்க வேண்டும் என்பதுதான் தேசாபிமானிகள் மற்றும் இந்து அபிமானிகளின் பிரார்த்தனை
எங்கிருந்தோ வந்த பார்சிகளையும் யூதர்களையும் ஏன் இப்பொழுது வந்த திபெத் உள்ளிட்ட பல அண்டை நாட்டு மக்களையும் அணைத்து காக்கும் இந்தியாவும் இந்துமதமும் இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை அடக்கி வாழவிடாமல் வைத்திருந்தது என சிலர் புலம்புவது எவ்வளவு பெரும் அறியாமை என்பதை மக்கள் புரிந்துகொண்டால் நல்லது
பார்சிக்களையும் யூதர்களையும் அணைத்து காத்து உயர்த்திய இந்துமதம் தன் சொந்தமக்களை மட்டும் சாதி மனுதர்மம் என வாழவிடாமல் செய்தது என்பதெல்லாம் எப்படிபட்ட மிகபெரிய பொய் என்பதை பலர் உணர்ந்துகொள்ளவில்லை உணர்ந்தாலும் அரசியலுக்காக மக்களை தொடர்ந்து ஏமாற்றிகொண்டிருக்கின்றார்கள் என்பதைத்தான் பார்சிக்கள் இந்தியவாழ் யூதர்களின் விசுவாசமும் அர்பணிப்பும் தேசபற்றும் காட்டுகின்றது
இந்தியவாழ் பார்சியும் யூதனும் அவன் மதத்தில் இருந்து கொண்டே இந்தியாவில் இந்தியாவுக்காக வாழ்ந்து கொண்டு இந்து துவேஷம் பேசாமல் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உழைத்து கொண்டிருக்கும் பொழுது, இங்கு மதம்மாறிய இந்துக்களும் அவர்களின் வாரிசுகளும் என்னவெல்லாமோ தேசவிரோதமும் இந்து துவேஷமும் சொல்லி கதறுவதுதான் மதமாற்றத்தின் மிகபெரிய ஆபத்தாக கண்முன் நிற்கின்றது அவர்களின் அறியாமையினையும் அப்பாவிதனமான குருட்டு நம்பிக்கையினையும் நினைத்து பரிதாபட வைக்கின்றது
அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள், அறியாமையிலும் பொய்யான போதனைகளிலும் சிக்கியிருப்பவர்கள், அவர்களை பழிக்காமல் வெறுக்காமல் உண்மையினை உணரவைப்பதுதான் தேசாபிமானிகள் மற்றும் இந்து அபிமானிகளின் பெரும் கடமை
அந்த கர்மாவினைத்தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்