பாலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் கோலலம்பூரில் கொலை

Image may contain: 1 person, smiling, plant and outdoor

பாலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோலலம்பூரில் கொல்லபட்டிருக்கின்றார்

விமான பொறியியல் பாடம் நடத்தும் அவர் கோலாலம்பூரின் ஸ்பாடாக் ஏரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நேற்று மாலை சுட்டுகொல்லபட்டிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்திற்று

உலகமெல்லாம் பலத்த அதிர்வினை இந்த படுகொலை ஏற்படுத்தியிருக்கின்றது

விசாரணை தொடங்கியதில் அவர் ஹமாஸ் இயக்கத்து ஆதரவாளர் என்பதும், ஹமாஸின் ஏவுகனை நுட்பத்தில் பங்கெடுத்திருக்கலாம் என்கின்றார்கள்.

பாலஸ்தீனம் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றது, ஹமாஸின் பெரும் மூளைகள் இப்படி கொல்லபடுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும் இம்முறை கடும் கோபத்தில் சிலிர்க்கின்றது

ஹமாஸ்.. பாலஸ்தீனம் என்றெல்லாம் வருவதால் இவரை யார் கொன்றிருப்பார்கள் என்பது நமது நண்பர்களுக்கு யூகிக்க முடியாதது அல்ல‌

நமது முகநூல் நண்பர்கள் மாபெரும் புத்திசாலிகள் என்பதால் இந்நேரம் அந்த கொலையினை செய்திருப்பது யார் என்பது தெரிந்திருக்கும்.