பாஸ்போர்ட் குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று…
குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெற்றி..மாபெரும் வெற்றி, நியாயத்திற்கும் தர்மத்திற்கும் வெற்றி
இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் ஏற்பட இருந்த பெரும் பிரச்சினையினை உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் இது மிக பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும்.
“யாரோ” தடுக்க முயன்ற பாஸ்போர்ட் இனி குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று
இனி என்ன செய்வார்கள்?
விமான டிக்கெட் கொடுக்க மாட்டோம் என வம்புக்கு வருவார்களோ?
அப்படி ஒரு நிலை வந்தால் அவருக்கு தனிவிமானம் வாங்கிகொடுக்க ரசிகர்கள் தயாராகி விடுவார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
எப்படியோ, கோடான கோடி ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிபளித்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு நீதியினை காப்பாற்றிய நீதியரசர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்…
