பிக் பாஸ் அலப்பறை ….

அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக கமலஹாசனின் 1 மணி நேர பேட்டியினை தினமும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும், அது போதும்

அவ்வளவு அனுபவங்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன, அவர் அதனை 100 நாள் சொன்னாலே மகா சுவாரஸ்யமாக இருக்கும்

அதனை விட்டுவிட்டு 13 இம்சைகளை போட்டு வறுக்கின்றார்கள், நடிக்க வரவில்லை என்றால் அவர்களை ஏன் இந்த பாடுபடுத்தவேண்டும்?

அதிலும் ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு 13 பேரையும் ராக்கெட்டில் ஏற்றி சென்றிருக்கும் பெரும் பொறுப்பினை சுமப்பது போல, தின்றது மாட்டு பிரியாணியோ எனும் சந்தேகத்தில் இருப்பது போல உம்மென்று ஒரு மாதிரி இருக்கும் சிநேகன் என்பவரை சகிக்க முடியவில்லை.

அவரை பார்த்தாலே டிவியினை ஆப் செய்ய தோன்றுகின்றது , இந்த கஞ்சா கருப்பு உண்மையிலே கஞ்சா அடிமையோ என்பது போல அலப்பறை,

வராத நடிப்பை வா என்றால் இவர்களிடம் எப்படி வரும்?

இதில் ஜூலி என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம், அவர் சரியாக சொன்னால்தான் ஆச்சரியம்

“சின்னம்மா.. சின்னம்மா” என கூவிவிட்டு அம்மணி விஜய்டிவியில் இருக்கின்றது

இதே ஜெயா உயிரோடு இருந்தால் 10 கஞ்சா வழக்கு, சில சர்ச்சை வழக்கு பாய்ந்து இந்த‌ அம்மணியின் பிக்பாஸ் இப்பொழுது புழல் சிறையில் நடந்துகொண்டிருக்கும்…


என்ன அநியாயம் இது?

உடனே அந்த விஜய்டிவி பிக்பாஸ் வீட்டை உடைத்து அந்த ஜூலிக்கு கதற கதற தமிழ்தாய் வாழ்த்தை எழுதியது யார் என‌ சொல்லிகொடுக்க வேண்டும்,

அவரின் உடைந்த பல் அருகே இன்னொரு பல் உடைந்தாலும் பரவாயில்லை

ஏய் சூலி சேய்ய்ய் ஜூலி…. வாழ்த்தை எழுதியது மூன்றுபேர் தெரியுமா? அது வீரப்பன், பிரபாகரன் மற்றும் அங்கிள் சைமன்