பிக் பாஸ் : குறை குடம் கூத்தாடும் காயத்திரி
பொது இடத்தில் பல்லாயிரம் பேர் பார்க்க ஒருவரை “சேரி பிஹேவியர்” என திட்டுவதுதான் பார்ப்பண பிஹேவியர்
இப்படி பகிரங்கமாக சொல்பவர் மீது இந்த தீண்டாமை, வன்கொடுமை சட்டம் எல்லாம் பாயாதா?
சில சர்ச்சைகுரிய வார்த்தைகளை மியூட் செய்வதுதான் மீடியாக்களின் வழமை, திரைப்படங்களில் கூட அப்படித்தான் சென்சார் போர்டு வழிகாட்டல்படி அமைதியாக்குவார்கள்
ஆனால் விஜயடிவி மிக பகிரங்கமாக இதனை அனுமதிக்கின்றது
சேரி என்பது நிச்சயம் தொடக்கத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்கானது அல்லதான், சேர்ந்துவாழும் இடம் சேரி என்றானது, பின் குறிப்பிட்ட மக்களுக்கு என முத்திரையானது
அக்ரஹாரம் அவாளுக்கும், சேரி இம்மக்களுக்கும் என்று அவர்களாகவே சொல்லிகொண்டார்கள்
இன்று அந்த சாதிய வக்கிரம்தான் சேரி பிஹேவியர் என்ற மிக வன்மைமான சொல்லாக தொடுக்கபடுகின்றது
இது சர்வ நிச்சயமாக “அக்ரஹார பிஹேவியர்”தான், தீண்டாமை, வன்கொடுமை சட்ட பிரிவுகளில் வரும் குற்றம்தான்
ஆனால் என்ன செய்துவிடுவார்கள்? ஒன்றும் நடக்காது, விஜய்டிவி எனும் மீடியாவினை யார் எதிர்பார்கள்? இதெற்கெல்லாம் சாதிய போராளிகள் பொங்க மாட்டார்கள்
காயத்திரி என்பவர் செயல்பாடுகள் எல்லாம் குறை குடம் கூத்தாடும் என்பது போலே உள்ளது, அம்மணி பாஜகவில் வேறு ஏதோ பொறுப்பில் உள்ளார் என்பதும் இன்னொரு செய்தி
ஒரு நிகழ்ச்சியினை பிரபலபடுத்த பல வழிகள் உண்டு, அதனை எல்லாம் தாண்டி ஜாதியினை சீண்டி பிரபலபடுத்தபோகின்றோம் என்றால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பாக இருக்கும்
விஜய்டிவி பிக்பாஸினை விடுங்கள், தமிழகம் எனும் பிக்பாஸ் இதனை எல்லாம் கவனித்துகொண்டுதான் இருக்கின்றது
சமூக அமைதியினை கெடுக்கும் எந்த விஷயத்தையும் ஏற்க முடியாது, அதனை ஒரு மீடியா அனுமதிப்பது என்பது கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரியது