பிஜேபியினை ஆதரிக்காதவன் நாட்டுபற்று அறவே இல்லாதவனாம்.

இந்தியர்கள் எல்லோரும் தாங்கள் நாட்டுபற்று உள்ளவர்கள் என்பதை பிஜேபியினை ஆதரித்து மட்டும்தான் நிரூபிக்க வேண்டுமாம்.

பிஜேபியினை ஆதரிக்காதவன்  நாட்டுபற்று அறவே இல்லாதவனாம்.

இப்பொழுதெல்லாம் பிஜேபியினை ஆதரிப்பதுதான் நாட்டுபற்று என பெரும் காமெடி கோஷம் எழும்பிகொண்டிருக்கின்றது

ஒருவனின் நாட்டுபற்றினை அளக்க பிஜேபிதான் அளவுகோலா?

மிக சீரியசாக காமெடி செய்ய கிளம்பிவிட்டார்கள்

மோடிக்கு முன்னாலும் இந்தியா இருந்தது, மோடிக்கு பின்னாலும் இந்தியா இருக்கும்,

இங்கிருக்கும் எல்லோருக்கும் நாட்டு பற்றும் இருக்கும்

அதனை பிஜேபி வாழ்க என சொல்லித்தான் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை..