பினாமி சொத்து குறித்து தகவல் தந்தால் 1 கோடி பரிசு
பினாமி சொத்து குறித்து தகவல் தந்தால் 1 கோடி பரிசு
தினகரன் யாருடைய பினாமி, இன்னும் சில கல்வி தந்தைகள் யாருடைய பினாமி , சில டிவிக்கள் யாரின் பினாமி என்பதெல்லாம் உலக ரகசியமா?
இதில் தகவல் தந்தால்தான் 1 கோடி கொடுப்பார்களாம்.
ஒருவன் தான் யாருடைய பினாமி என்பதை யாரிடமாவது சொல்வானா? ஒரே ஒரு விஷயம் தவிர வாய்ப்பில்லை
அதாவது ஒருவன் தன்னுடைய 50 லட்சம் சொத்துக்கு ஒருவனை பினாமியாக அமர்த்தியிருந்தால் அவன் சொல்ல முடியும்
“ஒழுங்காக இந்த சொத்தை எனக்கு கொடுத்துவிடு இல்லையென்றால் அரசிடம் சொல்லிவிட்டால் எனக்கு இரட்டை லாபம்”.
ஆக சிறிய தொகை பினாமிகளுக்கு சுக்கிர திசை.
நீதிமன்ற தீர்ப்பை சமூக வலைதளங்களில் விமர்சித்தால் நடவடிக்கை : செய்தி
திருமுருகன் காந்தி, சீமான் வகையறா எல்லாம் இந்திய தேசியத்தையே வாயில் வந்தவாறு விமர்சிக்கின்றார்கள். அண்டை நாட்டு தீவிரவாத இயக்கத்திற்காக கொடிபிடிக்கின்றார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பல கும்பல்கள் சமூக வலைதளமெங்கும் எழுதுகின்றன.
அவர்களை எல்லாம் கண்டுகொள்ளமாட்டார்களாம்.
இவ்வளவிற்கும் இன்னும் உச்சநீதிமன்றத்தால் தீவிரவாத இயக்கம் என சொல்லி, தடை இன்னும் நீடிக்கும் இயக்கம் அது.
அதனை ஆதரித்து கொடிபிடிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? அவர்களை எல்லாம் என்ன செய்துவிட்டார்கள்?
நாட்டுபற்றினை விட நீதிமன்ற தீர்ப்பு முக்கியம் என்கின்றார்கள், நாடு இருந்தால்தான் சட்டமும் நீதிமன்றமும் இயங்க முடியும் என்பதை சொல்வது யார்?
நீதிமன்ற தீர்ப்பு மதிக்கவேண்டியது, ஆனால் நாடு என்பது வணங்கி காக்கவேண்டியது அல்லவா?