பிப்ரவரி 12 1973 – பிப்ரவரி 12 2018
ஒரு விஷயத்தை திமுகவினர் சொல்வார்கள் என எதிர்பார்த்தோம், ஒருவரும் சொன்னதாக தெரியவில்லை. மறந்தார்களோ இல்லை அப்படி ஒன்று நடந்ததாக தெரியவில்லையோ என்னமோ?
ஆனால் இதெல்லாம் நுணுக்கமான விஷயம், கொதிக்க வேண்டிய விஷயம்
அதாவது திமுகவின் தொடக்ககால ஆட்சி நிச்சயம் நல்லாட்சியே, அண்ணாவிற்கு பின்னும் அது தொடர்ந்தது. இந்த ராமசந்திரன் கணக்கு கேட்டபொழுது சிக்கல் தொடங்கிற்று
பெரியாரே அவரை அழைத்து ” ஏம்பா ராமசந்திரா கட்சி பொருளாளர் நீர்தானே? உனக்கு தெரியாத கணக்கா? நீதிகட்சி போல திமுகவினை அழித்துவிடாதே..” என சொன்னாலும் ராமசந்திரன் கண்டுகொள்ளாமல் தனிகட்சி கண்டார்
ஆனால் திமுக அதன்பின் மிக முக்கியமான சட்டத்தை கொண்டுவந்தது, இந்தியாவிற்கே வழிகாட்டிய திட்டமது
1973 பிப்ரவரி 12ல் தமிழக அரசால் சட்டம் நிறைவேற்றபட்டது “தமிழக அரசின் பொதுவாழ்வில் இருப்பவர்கள் முதல்வர் முதல் பஞ்சாயத்து தலைவர் வரை யார் மீதேனும் ஊழல், லஞ்சம் , சொத்துகுவிப்பு சர்ச்சை வந்தால் அவர்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி தலமையில் விசாரணை நடத்தபடும்
குற்றம் நிரூபிக்கபட்டால் அவர்கள் பொதுவாழ்வினை விட்டு பல ஆண்டுகள் விலக வேண்டும், சொத்து அரசுடமை ஆக்கபடும். தண்டனை விதிக்கபடும்”
இச்சட்டம் இன்றைய லோக்பால், லோக் ஆயுதா போன்ற சட்டங்களுக்கு எல்லாம் முன்னோடி
அன்று மத்திய அரசு அப்படி ஒரு சட்டத்தை சிந்திக்கவே இல்லை, மற்ற மாநிலம் எல்லாம் இதுபற்றி யோசிக்கவே இல்லை
ஆனால் இப்படி ஒரு அசாத்திய சட்டத்தை இயற்றி “இது எமது ஆட்சி, களங்கமில்லா கறையில்லா ஆட்சி, சவால் விடுகின்றோம் நிரூபிக்க முடியுமா?” என தில்லாக நின்றது திமுக
கணக்கு கேட்ட ராமசந்திரன் முகம் இருண்டது, டெல்லியின் முகம் சுருண்டது
அப்படி தமிழக ஆட்சியாளர் ஊழலுக்கு அப்பால் இருக்க வேண்டும் , லஞ்சம், சொத்துகுவிப்போர் அப்பக்கமே இருக்க கூடாது என திமுக சட்டம் இயற்றிய நாள் பிப்ரவரி 12
இன்று அதே நாளில் ஊழலின் திருவுருவம், லஞ்சத்தின் மறு உருவம் என குற்றம் சாட்டபட்டு அது நிரூபிக்கவும் பட்ட குற்றவாளி ஜெயாவின் படம் அதே சட்டமன்றத்தில் திறக்கபட்டுள்ளது
ஏன் 45 வருடத்திற்கு முன்பு என்று திமுக ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்றியதோ அதே பிப்ரவரி 12ல் அவர் படம் திறக்க வேண்டும்?
இவை எல்லாம் பழன்ச்சாமியின் சொந்த மூளையில் உதிக்கும் விஷயமல்ல, மாறாக எங்கிருந்தோ போடபடும் திட்டங்கள்
நாங்கள் ஊழலை ஒழிக்க 1973லே சட்டமியற்றிய அதே நாளில் இவர்கள் ஊழல்ராணியின் படத்தை திறந்ததேன்? என திமுக பொங்கியிருக்க வேண்டும்
“இது லஞ்சத்திலிருந்து திமுக தமிழகத்தை விடுவிக்க எண்ணிய நாளில் மறுபடியும் லஞ்ச லாவண்யத்தை தொடங்குவோம் என அதிமுக இதோ படம் திறந்து கிளம்பியிருக்கின்றது” என கிளம்ப வேண்டாமா?
இதெல்லாம் திமுகவும் அதன் உறுப்பினரும் கவலைபடும் விஷயங்கள், நாம் சொல்லிவிட்டு நகரலாம்
ஆனாலும் 1973லே ஆட்சியாளருக்கு கடிவாளமாக ஆளும்கட்சியாக இருந்தபொழுதே திமுக சட்டம் இயற்றியிருக்கின்றது என்றால் அதன் ஆட்சி நன்றாகத்தான் இருந்திருக்கின்றது
ஆனாலும் அது ஊழல்கட்சி என சொல்லிகொண்டே இருப்பவனை என்ன சொல்லலாம்? அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என பரிதாபடவே முடியும்