பிரதமருக்கு பறக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போல..
காந்தி எளிமையானவர்தான் ஆனால் அவர் எளிமையாக வாழ பெரும் பணம் செலவழிக்க வேண்டும் என்றொரு வரி முன்பு பிரபலம்
இந்த மோடி என்பவரும் இப்பொழுது அதே சிக்கலுக்கு வருகின்றார், லட்சகணக்கு விலை உள்ள கோட் போடுகின்றார், பேஷன் ஷோவிற்கு செல்வது போல டிசைன் டிசைனாக உடுத்துகின்றார் என்றெல்லாம் முன்பு சர்ச்சை வந்தது
இப்பொழுது காளான் சர்ச்சை வேறு வந்துள்ளது, தைவானில் இருந்து விலை உயர்ந்த காளானை வரவழைத்து உண்கின்றார் மோடி என சர்ச்சை வெடிக்கின்றது
அவரிடம் கேட்டால் அழத்தான் செய்வார், அதுவும் மேடையில் நான் தாழ்த்தபட்ட்வன் , நான் காளான் உண்பது தவறா? என ஒப்பாரி வைப்பார்
இந்த அடிப்பொடிகளும் “மோடி கோட் சூட் போடுவார்டா, கெத்தா ஸ்டைலா பொறுக்கமுடியலண்ணா சாவுடா..” என்ற ரீதியில் பேசிகொண்டிருக்கும்
அது என்ன அப்படி ஒரு காளான்? அதுவும் தைவானிலிருந்து வரும் அளவிற்கு என்ன விஷேஷ காளான் அது.
குஜராத் தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் விமானத்தில் பறந்து சென்று தைவானில் காளான் உண்டிருப்பார் மோடி, தேர்தலால் செல்லமுடியவில்லை விமான செலவு குறைந்தது என மகிழ்ந்து தொலைய வேண்டியதுதான்
ஏதும் எதிர்கட்சி சொன்னால் ஒப்பாரி வைத்து அழவேண்டியது, ஆனால் தன்மீது வைக்கபடும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பறக்க வேண்டியது என்பது மோடி ஸ்டைல்
பாருங்கள் இப்பொழுது கூட குஜராத்தில் நீரிலும் ஆகாயத்திலும் செல்லும் இயந்திரத்தில் பறந்துகொண்டே இருக்கின்றார்
மனிதருக்கு பறக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போல..