பிரதமரை கொல்ல சதியா?
மோடிக்கு ஏதும் ஆகிவிட்டால் இன்னொருவர் வந்து இந்தியாவினை வளப்படுத்திவிட மாட்டாரா?
அதன் பின் பலமான இந்தியா உருவாகி மாவோயிஸ்டுகளை அழித்துவிடாதா?, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பே இப்படி ஒரு பேச்சு பிரதமர் இருப்பதுதானே
அதனால் மாவோயிஸ்டுகள் அவ்வளவு முட்டாள்தனமாக எல்லாம் திட்டமிட்டிருக்க மாட்டார்கள், அவர்களுக்கு கொஞ்சமேனும் அறிவிருக்கும் என நம்பபடுகின்றது
மோடி ஆட்சியினை தொடரவிடுவதை விட இத்தேசத்திற்கு என்ன பெரும் கெடுதல் செய்துவிட முடியும்?
இந்த தேசத்தை நம்மை விட மோடி நன்றாக கெடுத்து கொண்டிருக்கின்றார் என்பது அவர்களுக்கு தெரியாதா?
முதலில் அச்செய்தியினை நம்பமுடியவில்லை, ஆயிரம் பொய்செய்திகள் வரும் இணையமிது, நிமிடத்திற்கு ஒரு பிரேக் நியூஸ் வரும்
அப்படித்தான் மோடிக்கு கொலை திட்டம் என்ற செய்தியும் வந்தது
இந்திய வரலாற்றை புரட்டினால் ஒரு விஷயம் விளங்கும்
யாரெல்லாம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அறியபடும் பெரும் தலைவராக இருக்கின்றார்களோ அவர்களை சில சக்திகள் குறி வைக்கும்
இது சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என தொடர்ந்தது. இந்தியாவின் தனிபெரும் தலைவர்களை யாரோ விரும்புவதில்லை
இடையில் இந்த மொரார்ஜி, விபிசிங், நரசிம்மராவ், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன் போன்ற தனிபெரும் அடையாளம் இல்லாதவர்களுக்கு பெரும் ஆபத்தில்லை
ஆனால் யார் தனிபெரும் சக்திவாய்ந்த தலைவராக உருவாகின்றாரோ அவருக்கு இங்கு ஆபத்து அதிகம்
சர்ச்சைகளை கடந்து பார்த்தால் மோடி காஷ்மீர் முதல் வேலூருக்கு முந்தைய ஆந்திர எல்லை வரை அறியபடுகின்றார்
அங்கிருந்து கன்னியாகுமரி வரை மோடி என்ற நபரை கொண்டுவர பலர் படாதபாடுபட்டாலும் மோடி இந்தியாவின் தனிபெரும் தலைவராக உருவாகிவிட்டார் என்பது உண்மை
அதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்
அதனால் அந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் மோடிக்கு பலத்த காவலை ஏற்படுத்த வேண்டும்
மனிதர் வேறு அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் இஸ்ரேல் பிரதமருக்குரிய பாதுகாப்புடன் கூடிய விமானங்களை கொடுப்பது நல்லது
மோடி என்பவர் மேல் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவர் தேசத்தின் அடையாளம் அவரை காக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு
அந்த மனிதனுக்கு காவல்கள் மிக இறுக்கமாக அதிகரிக்கபடட்டும், சிறு துரும்பும் அவரை நெருங்க அனுமதியோம்